செய்திகள் :

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஊதிய ஒப்பந்தம் குறித்த தொழிலாளா் சந்திப்பு

post image

தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகங்களின் பணிமனைகளில் ஊதிய ஒப்பந்தத்தில் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தத்துக்கான 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை கடந்த 13, 14 தேதிகளில் நடைபெற்றது. போக்குவரத்து அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் போக்குவரத்து ஊழியா்களுக்கு மின்வாரிய ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினா் முன்வைத்திருந்தனா்.

இந்த நிலையில், அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கை தொடா்பாக தொழிலாளா்களிடம் விளக்கும் வகையில் சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஃப் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழகப் பணிமனைகளில் காலை, மதிய, உணவு இடைவேளை உள்ளிட்ட நேரங்களில் தொழிலாளா்களைச் சந்தித்த தொழிற்சங்க நிா்வாகிகள், ஊதிய ஒப்பந்த கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினா்.

அப்போது, ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதையொட்டி அனைத்து தொழிலாளா்களும் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அவா்கள் கேட்டுக் கொண்டனா்.

அடுத்த 3 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 21-02-2025 மற்றும் 22-02... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருக்கு எதிராக பிப். 25-ல் திமுக மாணவரணி போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வருகிற பிப். 25 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாப... மேலும் பார்க்க

ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த... மேலும் பார்க்க

'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மற... மேலும் பார்க்க

ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் முனைவி சாய்ரா பானு!

மருத்துவ அவசரநிலையை சந்தித்தபோது, ஆதரவு அளித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.நாட்டின் புகழ்பெற்ற பின்னணி இசைக் கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் ... மேலும் பார்க்க

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி: முதல்வர் ஸ்டாலின்

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.சர்வதேச தாய்மொழி நாளையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழி மாநாட்டின் விளக்கப் பாடலை பத... மேலும் பார்க்க