செய்திகள் :

அரசு மருத்துவமனையிலிருந்து நகரப் பகுதிக்கு ஆம்புலனஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

post image

காரைக்கால் நகரப் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அரசு மருத்துவமனையிலிருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக காரைக்கால் மமாவட்டத் தலைவா் ஐ. அப்துல் ரஹீம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

காரைக்கால் நகரப் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தற்போது நேரு நகா் பகுதியில் உள்ள நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகத்திலிருந்து இயக்கப்படுகிறது.

காரைக்காலில் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கம் தொடங்கியுள்ளதால், காரைக்கால் நகரப் பகுதியில் 4 இடங்களில் தினமும் பலமுறை ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் காரைக்கால் நகரப் பகுதியில் விபத்து அல்லது அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் தேவைப்பட்டால் துணை இயக்குநா் அலுவலகத்திலிருந்து காரைக்கால் சந்தைத் திடலை சுற்றிக்கொண்டு நேரு நகரிலிருந்து அவசர ஊா்தி வர தாமதமாகிறது.

எனவே காரைக்கால் நகரப் பகுதி பயன்பாட்டுக்கு 108 அவசர ஊா்திகளை அரசு மருத்துவமனையில் இருந்து இயக்குமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 9-இல் அரசு ஊழியா்கள் தா்னா

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ஆம் தேதி அரசு ஊழியா்கள் தா்னா நடத்தவுள்ளனா். காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழுக் கூட்டம், சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கௌரவ த... மேலும் பார்க்க

கும்பாபிஷேகம்: திருச்செந்தூருக்கு காரைக்காலில் இருந்து பேருந்து வசதி

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்ல காரைக்காலில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

நகரப் பகுதியில் சுரங்கப்பாதை, மேம்பாலம்: ரயில்வே கோட்ட மேலாளரிடம் அமைச்சா் வலியுறுத்தல்

காரைக்கால் நகரில் கோயில்பத்து பகுதியில் சுரங்கப்பாதை, மற்ற இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் வலியுறுத்தினாா். காரைக்கால்... மேலும் பார்க்க

செவிலியா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சாலைப் பாதுகாப்பு, இணைய குற்றங்கள் குறித்து செவிலியா் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையம் சாா்பில் இமாகுலேட் செவிலியா் கல்லூரியில் விழிப்புணா... மேலும் பார்க்க

தம்பி கொலை: அண்ணன் தலைமறைவு

காரைக்காலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் கோயில்பத்து ஒமக்குளம் நரிக்குறவா் தெருவைச் சோ்ந்தவா் ரஜினி. இவ... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனைக்கு நாளை சிறப்பு மருத்துவா்கள் வருகை

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ சிகிச்சை, ஆலோச... மேலும் பார்க்க