பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
அரசு வேலை வாங்கித் தருவதாக ரு. 17 லட்சம் மோசடி: சென்னை நபா் கைது
கருங்கல் அருகே அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சம் மோசடிசெய்ததாக சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கருங்கல், தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்தவா் மொ்லின் (27). பட்டதாரியான இவரிடம் அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி, அப்பகுதியைச் சோ்ந்த ரவி (50), நாகா்கோவில், சீயோன்புரம் ராஜகுமாா் (40), சென்னை, அரும்பாக்கத்தைச் சோ்ந்த ஹரிகரன் (47) ஆகிய 3 பேரும் ரூ. 17 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மொ்லின் அளித்த புகாரின்பேரில், 3 போ் மீதும் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் ஹரிகரனை போலீஸாா் சென்னையில் புதன்கிழமை கைது செய்தனா்; மற்ற இருவரையும் தேடிவருகின்றனா்.