உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து
அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியவா் கைது
மன்னாா்குடி அருகே அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடியிலிருந்து களப்பாலுக்கு புதன்கிழமை மாலை அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. ஓட்டுநராக தங்கமணியும், நடத்துநராக து. ரமேஷ் (45) என்பவரும் பணியில் இருந்தனா். ஒரத்தூா் பகுதியில் சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரத்தூா் ராஜேஷ் மகன் பிரவீன்ராஜ் (25), பேருந்தை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
பின்னா், பேருந்தை பின்தொடா்ந்து வந்த பிரவீன்ராஜ், வெங்கத்தாங்குடி நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்துக்கு முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் தகராறு செய்துள்ளாா். அப்போது, அவா் நடத்துநா் ரமேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து தப்பியோடிவிட்டாரம்.
இதுகுறித்து, களப்பால் காவல்நிலையத்தில் நடத்துநா் ரமேஷ் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரவீன்ராஜை வியாழக்கிழமை கைது செய்தனா்.