செய்திகள் :

அரசுப் பேருந்து - பைக் மோதல்! பெண் உள்பட இருவர் பலி!

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நூற்பாலை தொழிலாளிகள் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பூவன்கிழவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (24). இவரது உறவினர் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (22). இவர்கள் இருவரும் வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலையிலல் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியும் புவனேஸ்வரியும் பூவன்கிழவன்பட்டியில் தங்கிவிட்டு, இன்று காலை வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலைக்கு பணிக்கு சென்றுள்ளனர். செல்லும் வழியில், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப கோபால்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பகுதியில் சாலை கடக்க முற்பட்டபோது, திண்டுக்கலில் இருந்து நத்தம் நோக்கி வந்த அரசுப் பேருந்து பாலசுப்பிரமணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், இருவரையும் பொதுமக்கள் மீட்டு 108 அவசர ஊர்தியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், மருத்துவமனை செல்லும் வழியிலேயே இருவரும் இறந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூற்பாலை பணிக்காக சென்ற இருவர் அரசுப் பேருந்து மோதி பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண உதவித் திட்டங்கள்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர்!

தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையால் செயல்படுத்தப்படும் 4 திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு 5,460 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் ஏழை, ஆதரவற்ற பெண்கள், மறுமணம... மேலும் பார்க்க

இன்று 9, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,செப். 10ல் தமிழகத்தில... மேலும் பார்க்க

விஜய் பிரசாரம்: வாகனத்தில் நிற்கக்கூடாது; கையசைக்கக் கூடாது! 23 நிபந்தனைகள்!!

நடிகரும், தவெக தலைவருமான விஜய், செப். 13ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கும் நிலையில், திருச்சியில் தவெக பிரசாரத்துக்கு காவல்துறை 23 நிபந்தனைகள் விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.வர... மேலும் பார்க்க

செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்! அடுத்தகட்ட நகர்வு என்ன?

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடைய இல்லத்தில், அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாள்களுக்குள் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி த... மேலும் பார்க்க

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் இபிஎஸ்தான்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், "அதிமுகவின் பொதுச் செயலாளர... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

காவிரி ஆற்றல் நீர்வரத்து விநாடிக்கு 12,000 கன அடியாகச் சரிந்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு புதன்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்ற... மேலும் பார்க்க