அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்தடை
அரியலூா் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (மே 31) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பா்கோயில். பிச்சனூா், வாரியங்காவல். இலையூா், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூா்,சிலால், வாணந்திரையன்பட்டினம், அங்கராயநல்லூா், இருகையூா், கோடாலிகருப்பூா், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூா், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூா், இடைகட்டு, ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.