செய்திகள் :

' அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் '

post image

அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.

அப்போது அவர், "விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் ஒருமித்த குரலில் "நீல் ஆம்ஸ்ட்ராங்" எனப் பதிலளித்தனர். ஆனால், அதற்கு பதிலளித்த அனுராக் தாக்குர், "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்" எனத் தெரித்தார்.

பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது: சு. வெங்கடேசன்

அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்வினையை ஆற்றி வருகின்றனர். இதுகுறித்து நெல்லையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், அவ்வாறு பேசுவது அவரது இஷ்டம். அது குறித்து நான் கருத்து கூற முன்வரவில்லை.

ஆனால் நாங்கள் அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக்கல்வித் துறையை, தமிழக முதல்வர் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறது. அறிவைச் சார்ந்து இருக்கும் எங்கள் பாதையில் நாங்கள் செல்லும்போது எங்களோடு பயணிக்க விரும்புபவர்கள் வரலாம் என்றார்.

School Education Minister Anbil Mahesh has stated that we are running the education sector with progressive thinking based on science.

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரம்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டத்தில், ஆம்புலன்ஸை தடுத்து அதில் இருந்த ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிமுக பொது... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்ததற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவ... மேலும் பார்க்க

5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் 5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், ஆகஸ்ட் 27, 28ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 48 மணி ந... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: முதல்வரைச் சந்தித்த கவினின் தந்தை!

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் தந்தை இன்று(ஆக. 25) முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின... மேலும் பார்க்க

சாதாரண மக்களுக்காக செயலாற்றியவா் வசந்திதேவி!

திருச்சி: திருச்சியில் மறைந்த கல்வியாளரும், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் முன்னாள் தலைவருமான வே. வசந்திதேவிக்கு புகழஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் கட... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

அவிநாசி: திருமுருகன்பூண்டியில் திமுக வார்டுகளை தவிர, பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் செய்வதைக், கண்டித்து கூட்டத்தில் அனைத்துக் கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்... மேலும் பார்க்க