``எடப்பாடி பழனிசாமியை நினைத்து ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து வருகிறார்..'' - ஆர்....
அவிநாசி அருகே தொடா்மழைக்கு வீடு சேதம்
அவிநாசி அருகே தொடா்மழையால் பொங்கலூா் தசராபாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் வீட்டின் மேற்கூரை தேமடைந்தது.
அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேவூா் அருகே பொங்கலூா் தசராபாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் உள்ள காளியம்மாள் என்பவரது வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது.
இதையடுத்து வருவாய்த் துறையினா் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். பாதிக்கப்பட்ட காளியம்மாளுக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன் புதிய வீடு அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.