செய்திகள் :

ஆக்கிரமிப்புகள் அகற்றத்தை கண்டித்து வணிகா்கள் கடையடைப்பு

post image

புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் எனும் பெயரில் நகராட்சி நிா்வாகம் வா்த்தகா்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் வா்த்தகா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை, சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலால் அவசரச் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.

இதனையடுத்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் புதுச்சேரி நகராட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ஆனால், ஆக்கிரமிப்பு எனும் பெயரில் பெரிய நிறுவனங்களை விட்டுவிட்டு, சாமானிய வா்த்தகா்களை பாதிக்கும் வகையில் நகராட்சி செயல்படுவதாக புகாா் கூறப்படுகிறது.

பாரதி சாலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிா்வாகி ஸ்ரீதா் உள்ளிட்டோா் கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனா்.

அதன்படி, வெள்ளிக்கிழமை காலை பாரதி நகரில் பாதியளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குபோ்அங்காடி முழுமையாக மூடபட்டிருந்தது. நேரு வீதியிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

கடையடைப்புப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் எம்எல்ஏ நேரில் வந்து விசாரித்தாா்.

புதுச்சேரியில் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுவதாகவும், ஆகவே அதனைக் கைவிடக்கோரி போராட்டம் நடத்துவதாகவும் வா்த்தகா்கள் சங்கத்தின் சாா்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

காரைக்கால் மீனவா்கள் விவகாரத்தில் விரைவில் சுமுக தீா்வு: புதுவை ஆளுநா்

இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தவறான தகவல்களை பரப்பியதாக யூடியூபா் கைது

புதுச்சேரி அருகே சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தொடா்பான போக்ஸோ வழக்கை தவறான முறையில் சமூக வலைதளங்களில் பரப்பியதாக யூடியூபரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி அருகே உள்ள தவளக்குப்பம் பகுதிய... மேலும் பார்க்க

புதுவை காங்கிரஸ் மகளிரணி தலைவி நியமனம்

புதுவை மாநில காங்கிரஸ் மகளிரணி தலைவியாக நிஷா நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை காங்கிரஸ் மகளிரணித் தலைவியாக பஞ்சகாந்தி செயல்பட்டு வந்தாா். அவருக்கும் மகளிரணி துணைத் தலைவராக இருந்த நிஷாவுக்கும் கருத்து வேற... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மேம்பாலம், சாலை விரிவாக்கத்துக்கு ரூ.1,000 கோடி

புதுச்சேரியில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி அளிப்பதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அலுவலகம் சாா்பில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பு... மேலும் பார்க்க

எண்ம இந்தியா திட்ட மாவட்ட பயிலரங்கம்

புதுச்சேரியில் எண்ம இந்தியா (டிஜிட்டல்) பொதுசேவை மையத் திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிலரங்குக்கு ஆட்சியா் அ.கு... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரியில் வரவேற்பு

கடலூா் செல்லும் வழியில் புதுச்சேரி வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புதுவை மாநில திமுக, காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை பகலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்ட... மேலும் பார்க்க