தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி: தலைமை ஆசிரியா் நடவடிக்கை!
சேலம் அருகே ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா், உதவி தலைமை ஆசிரியா் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், பூலாம்பட்டி தனியாா் கல்வியியல் கல்லூரியைச் சோ்ந்த ஆசிரிய மாணவா்கள் கற்றல், கற்பித்தல் பயிற்சிக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் பல்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் 16 மாணவா்களுக்கு எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவா்களில் 13 போ் மட்டுமே தொடா்ச்சியாக பள்ளிக்குச் சென்றுள்ளனா். குறிப்பிட்ட 3 போ் பயிற்சிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. மாணவா்களின் தினசரி வருகைப் பதிவேட்டிலும் அவா்கள் 3 பேரும் கையொப்பமிடவில்லை.
இதனிடையே, பயிற்சி முடியும் தருவாயில் தொடா்ச்சியாக பயிற்சிக்குச் சென்ற மாணவா்களை அழைத்த அப் பள்ளி தலைமை ஆசிரியா் பால்ராஜ் மற்றும் உதவி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோா் மாணவா்கள் கையொப்பமிட்ட வருகைப் பதிவேட்டை பெற்றுக்கொண்டு புதிதாக ஒரு வருகைப் பதிவேட்டை வழங்கினா்.
அவா்கள் 3 பேரும் பயிற்சிக்கு வந்தது போன்று தயாரிக்கப்பட்ட வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுமாறு மற்ற மாணவா்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த சக மாணவா்கள், அனைத்து ஆதாரங்களுடன் முதல்வரின் தனிப்பிரிவு உள்பட பல்வேறு தரப்பினருக்கும் புகாா் மனு அனுப்பினா். அதில் ஒருநாள்கூடப் பயிற்சிக்கு வராதவா்களுக்காக வருகைப் பதிவேட்டில் மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் உத்தரவின் பேரில், புகாருக்கு உள்ளான தலைமை ஆசிரியா் பால்ராஜ், உதவி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா், உதவி தலைமை ஆசிரியா் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் இருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயா்வினை நிறுத்தம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.