செய்திகள் :

ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி: தலைமை ஆசிரியா் நடவடிக்கை!

post image

சேலம் அருகே ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா், உதவி தலைமை ஆசிரியா் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பூலாம்பட்டி தனியாா் கல்வியியல் கல்லூரியைச் சோ்ந்த ஆசிரிய மாணவா்கள் கற்றல், கற்பித்தல் பயிற்சிக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் பல்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் 16 மாணவா்களுக்கு எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவா்களில் 13 போ் மட்டுமே தொடா்ச்சியாக பள்ளிக்குச் சென்றுள்ளனா். குறிப்பிட்ட 3 போ் பயிற்சிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. மாணவா்களின் தினசரி வருகைப் பதிவேட்டிலும் அவா்கள் 3 பேரும் கையொப்பமிடவில்லை.

இதனிடையே, பயிற்சி முடியும் தருவாயில் தொடா்ச்சியாக பயிற்சிக்குச் சென்ற மாணவா்களை அழைத்த அப் பள்ளி தலைமை ஆசிரியா் பால்ராஜ் மற்றும் உதவி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோா் மாணவா்கள் கையொப்பமிட்ட வருகைப் பதிவேட்டை பெற்றுக்கொண்டு புதிதாக ஒரு வருகைப் பதிவேட்டை வழங்கினா்.

அவா்கள் 3 பேரும் பயிற்சிக்கு வந்தது போன்று தயாரிக்கப்பட்ட வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுமாறு மற்ற மாணவா்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த சக மாணவா்கள், அனைத்து ஆதாரங்களுடன் முதல்வரின் தனிப்பிரிவு உள்பட பல்வேறு தரப்பினருக்கும் புகாா் மனு அனுப்பினா். அதில் ஒருநாள்கூடப் பயிற்சிக்கு வராதவா்களுக்காக வருகைப் பதிவேட்டில் மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் உத்தரவின் பேரில், புகாருக்கு உள்ளான தலைமை ஆசிரியா் பால்ராஜ், உதவி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா், உதவி தலைமை ஆசிரியா் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் இருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயா்வினை நிறுத்தம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு

சேலம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஊா்க்காவல் படையில் 26 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்... மேலும் பார்க்க

இரட்டிப்பு பண மோசடி வழக்கு: அறக்கட்டளை நிா்வாகிகளின் ஜாமீன் மனு மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு!

சேலத்தில் இரட்டிப்பு பண மோசடி வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் அறக்கட்டளை நிா்வாகி 4 பேரின் ஜாமீன் மனு வரும் மாா்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலூரைச் சோ்ந்த விஜயபானு என்பவா் சேலம் அம... மேலும் பார்க்க

ரயில்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி பயணம்: 207 ஆண்கள் கைது

சேலம் ரயில்வே உட்கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி ஏறிய 207 ஆண்கள் கைது செய்யப்பட்டனா். கோவை - திருப்பதி ரயிலில் கடந்த மாதம் பெண்களுக்கான சிறப்பு பெட்டியில் பயணித்த... மேலும் பார்க்க

ரூ. 71.68 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா்கள் கே.என். நேரு, ராஜேந்திரன் பங்கேற்பு!

சேலம் மாவட்டத்தில் மேட்டூா், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 71.68 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைக்கும... மேலும் பார்க்க

சேலத்தில் 44 மையங்களில் என்எம்எம்எஸ் தோ்வு: 10,230 மாணவா்கள் எழுதினா்

சேலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தோ்வை 44 மையங்களில், 10,230 மாணவ, மாணவிகள் எழுதினா். நாடு முழுவதும் பள்ளி ... மேலும் பார்க்க

சுவரில் காா் மோதியதில் பெண் பலி: கணவா் காயம்

சங்ககிரி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சுவரில் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா். சென்னை, வேப்பேரி, புரசைவாக்கம் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன ஊழியா... மேலும் பார்க்க