செய்திகள் :

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

post image

ஆத்தூர் அருகே முட்டல் ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்துச் சீரானதையடுத்து ஆறு நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது. முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி வனத்துறையின் சூழல் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டுமின்றி சேலம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளித்தும், முட்டல் ஏரிப் பகுதியில் படகு சவாரி செய்து வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த, 11ம் தேதி முதல், கல்வராயன் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் வரத்து சீரானதால் ஆறு நாள்களுக்குப் பின்பு சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தற்போது ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளித்த மகிழ்ந்து வருகின்றனர்

சென்னையில் வந்து குவியும் கடத்தல் பொருள்கள்! என்னதான் தீர்வு?

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக ஏராளமான கடத்தல் பொருள்கள் பிடிபட்டு வருகின்றன.பல்வேறு நாடுகளிலிருந்தும் கடத்தி வரப்படும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள், சுங்கத் து... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.தேனி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தபோது அவரது காரில் இருந்தும் அவரது உதவியாளரிடம் இருந்தும் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த விஷசாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டு... மேலும் பார்க்க

கோவை பாஷா இறுதி ஊர்லவம்: அதிவிரைவுப் படை குவிப்பு!

கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஷாவின் இறுதி ஊர்வலத்தையொட்டி, மத்திய அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ.பாஷா உடல்நலக... மேலும் பார்க்க

சென்னையில் இன்று கனமழை, நாளை மிக கனமழை!

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகு... மேலும் பார்க்க

கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்!

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கடந்த மாதம் அங்கு சிகிச்சை பெற வந்திருந்த நோயாளி ஒருவருடன் வந்திருந்த இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் ... மேலும் பார்க்க