செய்திகள் :

ஆம் ஆத்மி எம்பியை சந்திக்க முயன்ற முன்னாள் முதல்வர்! தடுத்து நிறுத்திய காவல் துறை!

post image

ஜம்மு - காஷ்மீரில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரைச் சந்திக்க முயன்ற முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் தோதா தொகுதியின் ஆம் ஆத்மி சட்டப் பேரவை உறுப்பினரான மெஹ்ராஜ் மாலிக், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், ஜம்மு - காஷ்மீரில் எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மெஹ்ராஜ் மாலிக் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங், இன்று (செப்.11) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரை சந்திக்க ஜம்மு - காஷ்மீரில் மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த ஃபரூக் அப்துல்லா வருகை தந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரை அந்த வளாகத்தின் வாசலிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, துணைநிலை ஆளுநர் ஆட்சி செய்வதாகவும், அரசியலமைப்பின் கீழ் பேச முயன்றாலும் தடுக்கப்படுவதாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சஞ்சய் சிங், ஃபரூக் அப்துல்லா தடுக்கப்பட்டதை அறிந்து நுழைவு வாயிலின் மீது ஏறி காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆளுநர் பதவியிலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜிநாமா: குஜராத் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

Former Jammu and Kashmir Chief Minister Farooq Abdullah was reportedly stopped by police while trying to meet a protesting Aam Aadmi Party Rajya Sabha member.

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், 8 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் கரியாபந்து மாவட்டத்தில், சிறப்பு அதிரடிப் படை மற்றும் சி.ஆர்.பி.எஃப். கோப்ரா பட... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பேரிடருக்கு ரூ.1,200 கோடி நிவாரணம்! பிரதமர் மோடி அறிவிப்பு!

உத்தரகண்ட் மாநிலத்துக்கு, பேரிடர் பாதிப்புகளைச் சரிசெய்ய நிவாரண நிதியாக ரூ.1,200 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உத்தரகண்டில் பருவமழையின் தீவிரத்தால், மேகவெடிப்பு, கனமழை... மேலும் பார்க்க

மணிப்பூர்: பிரதமர் வருகையின்போது பாஜக நிர்வாகிகள் 43 பேர் ராஜிநாமா ஏன்?

மணிப்பூரில் 40-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் ராஜிநாமா செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, இந்த வார இறுதியில் மணிப்பூர் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மணிப்பூரில... மேலும் பார்க்க

சாலைகளைச் சீரமைக்கும் வரை சுங்கக் கட்டண வசூல் இல்லை! - தடையை நீட்டித்த கேரள உயர்நீதிமன்றம்

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை பளியக்கரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சுங்கக் கட்டண வசூல் தடையை செப். 15 வரை நீட்டித்துள்ளது கேரள உயர்நீதிமன்றம். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்த... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தீர்ப்பு மீது, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சட்டப் பேரவைகளில் நிறைவேற... மேலும் பார்க்க

ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்: ராகுல் காந்தி தலைமை தாங்கினார்!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகு... மேலும் பார்க்க