செய்திகள் :

ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்: ராகுல் காந்தி தலைமை தாங்கினார்!

post image

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு அவ்வப்போது பயணம் மேற்கொண்டுவருகின்றார். இந்த நிலையில், இரு நாள் பயணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேபரலிக்கு வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பச்சத் பவன் அரங்கில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாவட்ட மூத்த எம்பி தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமேதி எம்பி கே.எல்.சர்மா மற்றும் மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் உள்பட பல்வேறு மக்கள் பிரநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

உன்சாஹர் எம்எல்ஏ மனோஜ் குமார் பாண்டே இந்தக் கூட்டத்தை புறக்கணித்தார். சமாஜவாடி கட்சியின் முன்னாள் தலைவரான பாண்டே, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதற்காகவும், மாநிலங்களவை தேர்தலில் பாஜகவை ஆதரித்தற்காகவும் கட்சியில் இடருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டே,

பிகாரில் பிரதமரின் தாயாரை அவமதித்ததைக் கண்டிக்குமாறு கோரி மக்களவைத் தலைவருக்கும், அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் எழுத்துப்பூர்வ முன்மொழிவை சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐசியு படுக்கைகள் பற்றாக்குறையை ராகுல்காந்தி நிவர்த்தி செய்யவில்லை என்றும், எம்பியானதிலிருந்து காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்றத்தில் ரேபரேலி பற்றி எத்தனை முறை பேசியுள்ளார் என்றும் பாண்டே விமர்சித்தார்.

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு நாட்டிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும், 2024 முதல் ரேபரேலிக்கு அவர் செய்த பணிகளைப் பட்டியலிடவும் என்று அவர் கூறினார்.

Congress MP Rahul Gandhi on Thursday chaired a meeting of the District Development Coordination and Monitoring Committee (DISHA) here, which was boycotted by Unchahar MLA Manoj Kumar Pandey.

மணிப்பூர்: பிரதமர் வருகையின்போது பாஜக நிர்வாகிகள் 43 பேர் ராஜிநாமா ஏன்?

மணிப்பூரில் 40-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் ராஜிநாமா செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, இந்த வார இறுதியில் மணிப்பூர் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மணிப்பூரில... மேலும் பார்க்க

சாலைகளைச் சீரமைக்கும் வரை சுங்கக் கட்டண வசூல் இல்லை! - தடையை நீட்டித்த கேரள உயர்நீதிமன்றம்

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை பளியக்கரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சுங்கக் கட்டண வசூல் தடையை செப். 15 வரை நீட்டித்துள்ளது கேரள உயர்நீதிமன்றம். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்த... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தீர்ப்பு மீது, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சட்டப் பேரவைகளில் நிறைவேற... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி எம்பியை சந்திக்க முயன்ற முன்னாள் முதல்வர்! தடுத்து நிறுத்திய காவல் துறை!

ஜம்மு - காஷ்மீரில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரைச் சந்திக்க முயன்ற முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜம்மு - காஷ்மீரின்... மேலும் பார்க்க

ஆளுநர் பதவியிலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜிநாமா: குஜராத் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிர ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தேசி... மேலும் பார்க்க

தீ போல பரவும் வாக்குத் திருட்டு பிரசாரம்: ராகுல் காந்தி

புது தில்லி: வாக்குகளைத் திருடியே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது என்பதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறோம் என்று காங்கிரஸ் எம்.பி. ... மேலும் பார்க்க