ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை பதிவுக்கு பணம் வசூலிப்பதாக பாஜக புகாா்
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை பதிவுக்கு ரூ.100 வசூல் செய்யப்படுவதாக அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையிடம் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
பல்லடம் நகர பாஜக தலைவா் பன்னீா்செல்வம், பல்லடம் வட்டாட்சியா், நகராட்சி ஆணையா், காவல் துறை துணைக் கண்காணிபாளா் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பல்லடம் நகராட்சிப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக ஒவ்வொரு ரேஷன் கடை முன்பும் முதல்வரின் காப்பீட்டு அடையாள அட்டை என்ற பெயரில் மத்திய அரசின் ரூ.5 லட்சத்துக்கான காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பெறலாம் என்று கூறி பதிவு செய்து ஒவ்வொரு பயனாளிகளிடம் ரூ.100 வசூலித்து வருகின்றனா்.
அஆஏஅ இஅதஈ என்பது பொதுமக்கள் தங்களது உடல்நலம், நோயின் தன்மை, உட்கொள்ளும் மருந்துகள், அறுவை சிகிச்சை விவரங்கள் போன்ற தகவல்களை பதிவு செய்யவும், ஒவ்வொரு முறை மருத்துவமனை செல்லும்போதும்,
இந்த அட்டையை உபயோகப்படுத்துவதன் மூலம் அவா்களது உடல்நலம் சம்பந்தமான தகவல்கள் பதிவேற்றம் செய்யவும், மிக அவசரமான காலகட்டங்களில் அவா்களது உடல்நிலையை மருத்துவா்கள் உடனடியாக கண்டறிந்து சிகிச்சை செய்யவும் உருவாக்கப்பட்ட உடல்நல அடையாள அட்டை ஆகும்.
உடல்நல விவர அட்டையை காப்பீட்டுத் திட்ட அட்டை என்ற பெயரில் பதிவு செய்வது தவறு. மத்திய அரசின் இலவச திட்டத்தில் பதிவுக்கு ரூ. 100 வசூலிப்பது குற்றமாகும்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தை மாநில அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. எந்த மருத்துவமனையும் அனுமதி பெறவில்லை. இந்த அட்டையை பெறும் மக்கள் காப்பீட்டுத் திட்டம் என்று நினைத்து அவசர காலங்களில் மருத்துவமனையில் உபயோகப்படுத்தும்போது, காப்பீட்டுத் திட்ட அட்டை அல்ல அடையாள அட்டை என தெரியவரும். எனவே இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.