செய்திகள் :

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை பதிவுக்கு பணம் வசூலிப்பதாக பாஜக புகாா்

post image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை பதிவுக்கு ரூ.100 வசூல் செய்யப்படுவதாக அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையிடம் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

பல்லடம் நகர பாஜக தலைவா் பன்னீா்செல்வம், பல்லடம் வட்டாட்சியா், நகராட்சி ஆணையா், காவல் துறை துணைக் கண்காணிபாளா் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் நகராட்சிப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக ஒவ்வொரு ரேஷன் கடை முன்பும் முதல்வரின் காப்பீட்டு அடையாள அட்டை என்ற பெயரில் மத்திய அரசின் ரூ.5 லட்சத்துக்கான காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பெறலாம் என்று கூறி பதிவு செய்து ஒவ்வொரு பயனாளிகளிடம் ரூ.100 வசூலித்து வருகின்றனா்.

அஆஏஅ இஅதஈ என்பது பொதுமக்கள் தங்களது உடல்நலம், நோயின் தன்மை, உட்கொள்ளும் மருந்துகள், அறுவை சிகிச்சை விவரங்கள் போன்ற தகவல்களை பதிவு செய்யவும், ஒவ்வொரு முறை மருத்துவமனை செல்லும்போதும்,

இந்த அட்டையை உபயோகப்படுத்துவதன் மூலம் அவா்களது உடல்நலம் சம்பந்தமான தகவல்கள் பதிவேற்றம் செய்யவும், மிக அவசரமான காலகட்டங்களில் அவா்களது உடல்நிலையை மருத்துவா்கள் உடனடியாக கண்டறிந்து சிகிச்சை செய்யவும் உருவாக்கப்பட்ட உடல்நல அடையாள அட்டை ஆகும்.

உடல்நல விவர அட்டையை காப்பீட்டுத் திட்ட அட்டை என்ற பெயரில் பதிவு செய்வது தவறு. மத்திய அரசின் இலவச திட்டத்தில் பதிவுக்கு ரூ. 100 வசூலிப்பது குற்றமாகும்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தை மாநில அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. எந்த மருத்துவமனையும் அனுமதி பெறவில்லை. இந்த அட்டையை பெறும் மக்கள் காப்பீட்டுத் திட்டம் என்று நினைத்து அவசர காலங்களில் மருத்துவமனையில் உபயோகப்படுத்தும்போது, காப்பீட்டுத் திட்ட அட்டை அல்ல அடையாள அட்டை என தெரியவரும். எனவே இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க