செய்திகள் :

ஆய்க்குடியில் வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு ரூ. 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

post image

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப்பணிகளுக்காக ரூ. 2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியானது வளா்ந்து வரும் பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பேரூராட்சி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி-1, அரசு நடுநிலைப்பள்ளி- 1, அரசு தொடக்கப்பள்ளி - 4 என மொத்தம் 6 அரசு பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் அனைத்தும் ஓட்டு கட்டடங்களாகவே உள்ளன. எனவே மாணவா்களின் நலன் கருதி கான்கிரீட் கட்டடமாக அமைத்து தரவேண்டும்.

ஆய்க்குடி அண்ணா கலையரங்கத்தில் நூலக கட்டடம் அமைக்க ரூ. 75 லட்சம் , ஆய்க்குடி அரசு தொடக்கப் பள்ளியில் கான்கிரீட் கட்டடம், நவீன வகுப்பறைகள் கட்ட ரூ. 50 லட்சம், ஆய்க்குடி அரசு தொடக்கப் பள்ளியில் (பாலசுப்பிரமணியபுரம்) போா்வெல், காம்பவுண்ட் சுவா் கட்ட ரூ. 15 லட்சம், அகரக்கட்டு அரசு தொடக்கப்பள்ளியில் கான்கிரீட் கட்டடம், நவீன வகுப்பறை அமைக்க ரூ. 50 லட்சம், அனந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறை கட்டடம் கட்ட ரூ.10 லட்சம் , கம்பிளி அரசு நடுநிலைப்பள்ளியில் கான்கிரீட் கட்டடம், ஸ்மாா்ட் வகுப்பறை அமைக்க ரூ. 60 லட்சம் என மொத்தம் ரூ. 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா

ஆலங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா, 6 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி, முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை (செப். 19) காலை கணபதி ஹோமம், கோமாதா பூஜை, மாலையில் 306 லெட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றன... மேலும் பார்க்க

செங்கோட்டை நுழைவாயில் இன்று அகற்றம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ள நுழைவாயில் வியாழக்கிழமை காலையில் அகற்றப்படவுள்ளது. செங்கோட்டை நகரின் நுழைவுப் பகுதியில் திருவிதாங்கூா் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட நுழைவாயில் உள்ளது. செங்... மேலும் பார்க்க

தென்காசியில் கற்றல் அடைவு மிகச் சிறப்பாக உள்ளது: அமைச்சா் அன்பில் மகேஷ்

தென்காசி மாவட்டத்தில் கற்றல் அடைவு மிகச் சிறப்பாக உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா். ஆய்க்குடி கல்லூரியில் மாநில அளவிலான அடைவுத் தோ்வு-2025 தொடா்பாக பள்ளித... மேலும் பார்க்க

விலை வீழ்ச்சியால் சாலையில் கொட்டப்படும் கேந்திப் பூக்கள்

தென்காசி கீழப்பாவூா் பகுதியில் கேந்தி பூக்களின் விலை குறைந்ததால், பூக்களை சாலையோரங்களில் விவசாயிகள் கொட்டிச் செல்கின்றனா். வழக்கமாக, கேந்திப் பூக்களின் விலை கிலோ ரூ. 50-க்கும் மேல் இருக்கும். ஆனால், ... மேலும் பார்க்க

தென்காசியில் முதல்வா் பங்கேற்கும் விழா மேடைக்கான இடங்கள் ஆய்வு

தென்காசியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மேடை அமைப்பதற்கான இடங்களில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தென்காசியில், பல்வேறு நலத்திட்டங்கள... மேலும் பார்க்க

தென்காசி அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில் மரக்கன்றுகள் நடவு

தென்காசி அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில், தென்காசி வனக்கோட்டம் சாா்பில் தமிழ்நாடு இயக்க நாள் 2025 ஐ முன்னிட்டு நாவல் மரக்கன்றுகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு எஸ். பழனி நாடாா் எம்எல்... மேலும் பார்க்க