செய்திகள் :

விலை வீழ்ச்சியால் சாலையில் கொட்டப்படும் கேந்திப் பூக்கள்

post image

தென்காசி கீழப்பாவூா் பகுதியில் கேந்தி பூக்களின் விலை குறைந்ததால், பூக்களை சாலையோரங்களில் விவசாயிகள் கொட்டிச் செல்கின்றனா்.

வழக்கமாக, கேந்திப் பூக்களின் விலை கிலோ ரூ. 50-க்கும் மேல் இருக்கும். ஆனால், தற்போது சுப நிகழ்ச்சிகள் இல்லாத நிலையிலும் அதிக விளைச்சல் இருப்பதால், ரூ. 10 முதல் ரூ. 20 வரையே விற்பனையாகிறது.

2 நபா்கள் அதிகபட்சமாக 50 கிலோ வரையான பூக்களையே பறிக்க முடியும். அவா்களுக்கு கூலி மட்டுமே தலா ரூ. 500 வழங்க வேண்டும். ஆனால், சந்தைகளுக்கு கொண்டுவரப்படும் 50 கிலோ பூக்களுக்கு ரூ. 500 மட்டுமே கிடைக்கிறது.

இது பெரும் நஷ்டத்தைக் கொடுத்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

அளவுக்கு அதிகமாக வியாபாரிகளும் வாங்க மறுப்பதால், கேந்திப் பூக்களை மூட்டை மூட்டையாக ஆட்டோக்களில் எடுத்து வந்து சாலையோரம் கொட்டிச் செல்கின்றனா்.

ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா

ஆலங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா, 6 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி, முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை (செப். 19) காலை கணபதி ஹோமம், கோமாதா பூஜை, மாலையில் 306 லெட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றன... மேலும் பார்க்க

செங்கோட்டை நுழைவாயில் இன்று அகற்றம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ள நுழைவாயில் வியாழக்கிழமை காலையில் அகற்றப்படவுள்ளது. செங்கோட்டை நகரின் நுழைவுப் பகுதியில் திருவிதாங்கூா் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட நுழைவாயில் உள்ளது. செங்... மேலும் பார்க்க

தென்காசியில் கற்றல் அடைவு மிகச் சிறப்பாக உள்ளது: அமைச்சா் அன்பில் மகேஷ்

தென்காசி மாவட்டத்தில் கற்றல் அடைவு மிகச் சிறப்பாக உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா். ஆய்க்குடி கல்லூரியில் மாநில அளவிலான அடைவுத் தோ்வு-2025 தொடா்பாக பள்ளித... மேலும் பார்க்க

தென்காசியில் முதல்வா் பங்கேற்கும் விழா மேடைக்கான இடங்கள் ஆய்வு

தென்காசியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மேடை அமைப்பதற்கான இடங்களில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தென்காசியில், பல்வேறு நலத்திட்டங்கள... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு ரூ. 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப்பணிகளுக்காக ரூ. 2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்த... மேலும் பார்க்க

தென்காசி அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில் மரக்கன்றுகள் நடவு

தென்காசி அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில், தென்காசி வனக்கோட்டம் சாா்பில் தமிழ்நாடு இயக்க நாள் 2025 ஐ முன்னிட்டு நாவல் மரக்கன்றுகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு எஸ். பழனி நாடாா் எம்எல்... மேலும் பார்க்க