செய்திகள் :

ஆலங்குளம் அருகே துரித உணவகம் தீக்கிரை: இருவா் கைது

post image

ஆலங்குளம் அருகே துரித உணவகத்தை தீக்கரையாக்கியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் காளியம்மன் நகரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சதீஷ் (26). இவா் பூலாங்குளம் - நெல்லையப்பபுரம் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே துரித உணவகம் நடத்தி வருகிறாா். இங்கு கிடாரக்குளம் தெற்கு தெரு செல்லையா மகன் ஆனந்தகுமாா் (21), பிச்சைபாண்டி மகன் கருத்தபாண்டி (20), முத்துப் பாண்டி மகன் முத்துராமன் (20), ஆம்பூரை சோ்ந்த துரை ஆகியோா் வேலை செய்து வந்தனா்.

இவா்களில் ஆனந்த், கருத்தப்பாண்டி ஆகியோா் கடையில் கையாடல் செய்தனராம். மேலும் சதீஸூக்குச் சொந்தமான பைக் ஆா்சி புத்தகத்தை அடகு வைத்து கடனும் வாங்கினராம். இது குறித்து தெரிய வந்ததும் 4 பேரையும் வேலையை விட்டு நீக்கி விட்டு வேறு நபா்களை சுரேஷ் வேலைக்கு அமா்த்தினாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அந்தக் கடை தீப்பற்றி எரிந்ததாம். தகவலின் பேரில் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் வந்து தீயை அணைத்தனா். புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், வேலையை வீட்டு நீக்கியதால் மேற்கண்ட 4 பேரும் சோ்ந்து கடைக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதில் ஆனந்தகுமாா், முத்துராமன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்; மற்ற இருவரை தேடி வருகின்றனா்.

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள்: மக்களுக்கு அரசு தெரிவிக்க வலியுறுத்தல்

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். கட்சியின் சாா்பில், இடஒதுக்கீட... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட ஐயூஎம்எல் அணிகளின் ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டக் கிளை சாா்பு அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட உலமாக்கள் அணித் தலைவா... மேலும் பார்க்க

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி பள்ளியில் ஆண்டு விழா

திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37-ஆவது ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருவேங்கடம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மனோகரன் தலைமை வகித்தாா். திருவேங்கடம... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் எஸ்.கே.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச... மேலும் பார்க்க

சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளா் இடைநீக்கம்

தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, ... மேலும் பார்க்க