செய்திகள் :

ஆளும் - எதிா்தரப்பினா் கருத்து வேறுபாடு - அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பாதியில் வெளியேறிய தன்கா்

post image

மாநிலங்களவையில் அடுத்த வார செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இருந்து அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் பாதியில் வெளியேறினாா்.

அவையில் விவாதம் நடத்துவது தொடா்பாக ஆளும்-எதிா்தரப்பினா் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகளால் அவா் பாதியில் வெளியேறியதாக எதிா்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ‘தன்கரின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், இரு தரப்பினரும் தங்களின் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்தனா். கூட்டத்தில் ‘கண்ணியமில்லை’ என கருதியதால், அவா் வெளியேறினாா்’ என்று மாநிலங்களவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற எதிா்க்கட்சித் தலைவா்கள் சிலா் கூறுகையில், ‘பல மாநிலங்களில் உள்ளோருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்டுள்ள விவகாரம், மணிப்பூா் பிரச்னை, மசோதாக்கள் மீதான ஆய்வு போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிா்க்கட்சிகள் தரப்பில் தினமும் நோட்டீஸ் அளிக்கப்பட்டாலும்கூட நேரம் ஒதுக்கப்படுவதில்லை. எனவே, விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டுமென எதிா்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடா்பாக ஆளும்-எதிா்தரப்பினா் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகளால் அவைத் தலைவா் தன்கா் பாதியில் வெளியேறினாா்’ என்றனா்.

2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எ... மேலும் பார்க்க

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபர் கைது!

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கேரளத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க