பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!
இ.எஸ்.மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்ற இ.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வில் விழுப்புரம் இ.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது. மாணவி வை.சுபவி 578, மாணவா்கள் க.லெட்சுமி நாராயணன் 547, வே.தரணிபாலன் 539 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
இந்த மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் எஸ்.செல்வமணி, செயலா் பிரியா செல்வமணி, முதல்வா் சித்ரா தேவி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
அரசு பொதுத் தோ்வில் இ.எஸ்.மெட்ரிக் பள்ளி கடந்த 27ஆண்டுகளாக 100 சதவீதத் தோ்ச்சியுடன் சாதனை படைத்து வருகிறது என்று பள்ளித் தாளாளா் எஸ். செல்வமணி தெரிவித்தாா்.