செய்திகள் :

இத்தாலி: சபிக்கப்பட்ட கற்களை திருடிய சுற்றுலாப் பயணி... என்ன நடந்தது?

post image

இத்தாலியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சுற்றுலாத்தளமான பொம்பெயி (pompeii)-ல் கலைப்பொருட்களை முதுகுப்பையில் வைத்து திருடிச் செல்ல முயன்ற 51 வயது ஸ்காட்லாந்து சுற்றுலாப் பயணி பிடிபட்டுள்ளார்.

பண்டைய ரோமானிய நகரமான இங்கிருந்து 5 கற்கள் மற்றும் ஒரு செங்கல் என 6 பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார் அந்த பயணி. அவரது நடவடிக்களைக் கண்டு சந்தேகமடைந்த வழிகாட்டி (guide) காவல்துறையை அழைத்துள்ளார்.

Pompeii, Italy
Pompeii, Italy

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான பொம்பெயிலிருந்து கற்கள் திருடியவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதுடன், இத்தாலிய அதிகாரிகள் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அவரிடமிருந்து கற்கள் மீட்கப்பட்டு மீண்டும் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியக பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்காக சுற்றுலாப் பயணிக்கு 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

சபிக்கப்பட்ட நகரமா?

பொம்பெயில் திருடுவதனால் சட்டப்பூர்வமாக தண்டனை வழங்கப்படுவது மட்டுமல்லாமல் துரதிர்ஷ்டமும் துரத்தும் என நம்பப்படுகிறது.

வெசுவியஸ் எரிமலை

பழமையான இந்த நகரம் கி.மு 310ல் ரோமானிய கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. கி.பி 79ம் ஆண்டு வெசுவியஸ் எரிமலை வெடிப்பால் புதையுண்டிருக்கிறது. ரோமானியர்கள் இயற்கை பேரழிவுகளை கடவுளின் செயலாகத் தொடர்புபடுத்துவதனால், இந்த நகரின் அழிவு குறித்து பல்வேறு கதைகள் மக்களால் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.

1748ம் ஆண்டு ஸ்பானிஷ் அகழ்வாராய்சி அறிஞர்கள் இந்த நகரைக் கண்டறிந்துள்ளனர். அப்போது எரிமலை சாம்பலால் மூடப்பட்ட பிணங்கள் உட்பட சிதிலமடைந்த மனித உடல்களை எடுத்தனர். இது உள்ளூர்வாசிகள் மனதில் ஆழமான அச்சத்தை விதைத்தது.

எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட நபர்

2020ம் ஆண்டு இங்கு வந்த ஒரு பெண்மணி, 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடியதாக சில அரும்பொருட்களைத் திருப்பிக்கொடுத்தார். அந்த கற்களை எடுத்துச் சென்றது முதல் தன்னை துரதிர்ஷ்டம் பீடித்ததாகவும் தனிப்பட்ட, குடும்ப சூழலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் இந்த தளத்தை சாபமாகக் கருதுவது வலுவடைந்துள்ளது.

`கோல்டு காபி ஆர்டர் செய்துள்ளார்'- டெலிவரி பாய் வேடத்தில் ஷாருக் கான் பங்களாவில் நுழைய முயன்ற ரசிகர்

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பை பாந்த்ராவில் உள்ள மன்னத் பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது அந்த பங்களாவில் கூடுதல் மாடிகள் கட்டி புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அருகில் உள்ள கட்டட... மேலும் பார்க்க

அமெரிக்கா: 33 ஆண்டுகளில் 24 மில்லியன் மைல்; விமான பயணத்தில் சாதனை; யார் இந்த பயணி டாம் ஸ்டூக்கர்?

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த 71 வயதான டாம் ஸ்டூக்கர் என்பவர், ஒரு கார் விற்பனை ஆலோசகராகவும், விற்பனை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.டாம் ஸ்டூக்கர் தனது வாழ்நாள் பயண அனுமதியைப் ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: புலிகள் வாழும் காட்டில் சிக்கிய சுற்றுலா பயணிகள் – சவாரி வாகனம் பழுதடைந்ததால் பரபரப்பு!

ராஜஸ்தானின் ரந்தாம்போர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற வாகனம் பழுதடைந்ததால் புலிகள் வாழும் காட்டில் பயணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் ஒன்றரை மணி நேரம் சிக்கித் தவித்துள்ள சம்பவம் பெரும் பரப... மேலும் பார்க்க

ஸ்வீடனின் 113 ஆண்டுகள் பழைமையான தேவாலயம் புதிய இடத்திற்கு மாற்றம் - என்ன காரணம் தெரியுமா?

ஸ்வீடனின் ஆர்க்டிக் பகுதியிலுள்ள புகழ்பெற்ற கிறூனா தேவாலயம், தரை இடிவு (landslide) மற்றும் நிலத்தடி இரும்புத்தாது சுரங்க விரிவாக்கத்தால் புதிய இடத்திற்கு மாற்றப்படுகிறது.600 டன் எடையுள்ள, 113 ஆண்டுகள்... மேலும் பார்க்க

சென்னை: வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவர் பிட்புல் நாய் கடித்ததால் உயிரிழப்பு – என்ன நடந்தது?

சென்னையில் உள்ள ஜாபர்கான் பேட்டை, VSM கார்டன் தெருவில் நடந்த துயரச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (48) என்பவர் சமையல் வேலை செய்து வருகிறார். நேற... மேலும் பார்க்க

`ஒரு கோழியின் கதை' ஆயுளைக் கடந்து; 14 ஆண்டுகள் கடந்து வாழும் ’உலகின் வயதான கோழி’ - ஆச்சர்ய பின்னணி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் ‘Pearl’ என்ற கோழி, சாதாரணமாக 3 முதல் 10 ஆண்டுகள் வரை மட்டுமே வாழும் கோழிகளின் சராசரி ஆயுளை மீறி, 14 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.Pearl... மேலும் பார்க்க