செய்திகள் :

"இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை நாம் ஊக்குவிக்கக் கூடாது; நாங்கள் வெறும்.."- அஸ்வின் பளீச்

post image

கிரிக்கெட் என்னதான் குழு ஆட்டமாக இருந்தாலும், 11 பேரும் ஒத்துழைத்தால்தான் வெற்றி நிச்சயம் என்றாலும் தனிமனித துதிபாடலே அதிகமாக இருக்கிறது. அதுவும், கிரிக்கெட் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெரும் வணிகமாக்கப்பட்ட இந்தியாவில் இந்த சூப்பர் ஸ்டார் கலாசாரம் உச்சம்.

தோனி - கோலி - ரோஹித்

உச்சத்தில் வைத்து கொண்டாடப்படும் வீரர் மோசமாக சொதப்பினாலும் கூட அணியிலிருந்து நீக்க முடியாத அளவுக்கு செலக்சன் கமிட்டி வரை வணிகத்தோடு அது பரவியிருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை ஊக்குவிக்கக் கூடாது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

ரோஹித் அஸ்வின்

தனது இந்தி யூடியூப் சேனலில் இது குறித்து பேசியிருக்கும் அஸ்வின், ``இந்திய கிரிக்கெட்டில் இது போன்ற விஷயங்களை முதலில் சாதாரண நிலைக்கு கொண்டு வரவேண்டும். இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் வழக்கத்தை, பிரபலங்களை நாம் ஊக்குவிக்கக் கூடாது. நாங்கள் கிரிக்கெட் வீரர்கள் தானே தவிர, நடிகர்களோ சூப்பர் ஸ்டார்களோ அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள். சாதாரண மக்களை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். அவர்கள் நம்மைத் தங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடியவராக இருக்க நாம் வேண்டும்." என்று கூறினார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Champions Trophy: ``நிறைய துன்பங்களை எங்க நாடு சந்திச்சுருக்கு,ஆனா..."- பாக் கேப்டன் முகமது ரிஸ்வான்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 19) தொடங்குகிறது.1996 க்குப் பிறகு 29 வருடங்கள் கழித்து தற்போதுதான் பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்த... மேலும் பார்க்க

Champions Trophy: 29 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் ICC தொடர்; களமிறங்கும் டாப் 8 அணிகள்- முழு விவரம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 19) தொடங்குகிறது.1996 க்குப் பிறகு 29 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பாக... மேலும் பார்க்க

கோலிக்கே 4-வது இடம்தான்; சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையை விட அதிக சம்பளம் பெறும் 6 IPL வீரர்கள்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்) தொடங்கவிருக்கிறது. ஒருநாள் போட்டியில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் இந்த சாம்பியன்ஸ் ... மேலும் பார்க்க

Rahane: ``யாரும் என்னிடம் அதைப் பற்றிக் கூறவில்லை" - இப்போது வருந்தும் ரஹானே

இந்திய டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்த அளவில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே சாலிட் டிஃபென்ஸ் ஆடக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.அதுவும் சச்சின், டிராவிட், லக்ஷ்மன் போன்றோருக்குப் பிறகு இந்திய ... மேலும் பார்க்க

WPL: `RCB-யில் ஒரு தோனி' - குஜராத் ஜெயன்ட்ஸ்-ஐ புரட்டியெடுத்த ரிச்சா கோஷ்... குவியும் பாராட்டுகள்!

மகளிர் பிரீமியர் லீக் (WPL) மூன்றாவது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு (RCB) அணியும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. ... மேலும் பார்க்க

Babar Azam: "தயவு செய்து என்னை இப்படி அழைக்காதீர்கள்" - ரசிகர்களுக்கு பாபர் அசாமின் வேண்டுகோள் என்ன?

ஒருநாள் போட்டி தரவரிசையில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர், பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கவிருக்கிறது.இதில், இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தத... மேலும் பார்க்க