செய்திகள் :

இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியளிக்க விரும்பும் பார்சிலோனா லெஜெண்ட்! ஒப்பந்தம் நிராகரிப்பு?

post image

இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியளிக்க விரும்பிய முன்னாள் பார்சிலோனா வீரர் ஜவிக்கு அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்திய ஆடவர் கால்பந்து அணி மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணி ஃபிஃபா தரவரிசையில் 133-ஆவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது.

இந்தியாவின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் சமீபத்தில் வெளியேறினார். அவருடைய ஓராண்டு காலத்தில் 8 போட்டிகளில் 1-இல் மட்டுமே வென்றிருந்தது.

அடுத்ததாக யாரை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்ற தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்தப் பதவிக்கு 8 முறை லா லீகா வென்ற பார்சிலோனா லெஜெண்ட் ஜவி விண்ணபித்துள்ளார்.

இந்திய கால்பந்து போட்டிகளை கவனிக்கும் ஜவி

சமீபத்தில் ஜெவி ஒரு பேட்டியில், “நான் அதிகமாக லா லீகா போட்டிகளையும் பிரீமியர் லீக்கையும் பின் தொடர்வேன். பிரெஞ்சு போட்டிகளை பார்க்காவிட்டாலும் எப்போதாவது பிஎஸ்ஜி, மார்செல்லி போட்டிகளைப் பார்ப்பேன்.

இத்தாலியில் கோமோ. ஏனெனில் அங்கு என் நண்பர் இருப்பார்கள். சௌதி, கத்தாரிலும் நண்பர்கள் நல்ல நண்பர்கள் இருப்பதால் அதையும் அடிக்கடி பார்ப்பேன்.

எனக்கு கால்பந்து மிகவும் பிடிக்கும். அதனால், அதிகமாக பார்க்கிறேன். பனாமாவையும் பார்க்கிறேன். சில நேரங்களில் ஐஎஸ்எல் போட்டிகளைப் பார்க்கிறேன், ஏனெனில் அங்குதான் ஸ்பானிஷ் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள்” என்றார்.

சோகத்தில் இந்திய ரசிகர்கள்

பார்சிலோனாவில் ஜவி 8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 81 கோடி) சம்பளமாக பெற்றுவந்தார். கடந்த 2023/24 சீசனில் அவர் அந்த அணியை விட்டு விலகினார்.

இந்தப் பதவிக்கு அவருக்குக் கூடுதல் சம்பளம் தரப்பட வேண்டுமென இந்திய கால்பந்து கூட்டமைப்பு மறுத்துவிட்டதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜவியை ஏற்க இந்திய கூட்டமைப்பு ஏற்க மறுத்ததால் இந்திய கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

யாராவது லெஜெண்ட்டுகள் வந்தால் மட்டுமே மீண்டும் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என கால்பந்து ரசிகர்கள் ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் சுமித் நாகல், யூகி பாம்ப்ரி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸா்லாந்து அணியுடனான மோதலுக்காக, 8 போ் கொண்ட இந்திய அணியை அகில இந்திய டென்னிஸ் சங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.இந்தியாவின் டாப் ஒற்றையா் வீரா் சுமித் நாகல் (ஏடி... மேலும் பார்க்க

உலக குத்துச்சண்டை: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க, 20 பேருடன் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இரு முறை உலக சாம்பியன் நிகாத் ஜரீன், ஒலிம்பிக் பதக்கம் வென்ற லவ்லினா போா... மேலும் பார்க்க

இந்திய ஹாக்கி அணி ஆகஸ்டில் ஆஸி. பயணம்

நான்கு ஆட்டங்கள் கொண்ட நட்பு ரீதியிலான ஹாக்கி தொடரில் மோதுவதற்காக, இந்திய ஆடவா் ஹாக்கி அணி ஆகஸ்டில் ஆஸ்திரேலியா செல்கிறது.பொ்த் நகரில் ஆகஸ்ட் 15, 16, 19, 21 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலிய ஆடவா் அணியுடன் இ... மேலும் பார்க்க

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: உன்னாட்டி ஹூடா வெளியேறினாா்

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது. உன்னாட்டி ஹூடா காலிறுதியில் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.ஆடவா் இர... மேலும் பார்க்க

உலக ஜூனியா் ஸ்குவாஷ்: அனாஹத் சிங்குக்கு வெண்கலம்

எகிப்தில் நடைபெறும் உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றாா். இப்போட்டியில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.மகளிா் ஒற... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் கனமழை - புகைப்படங்கள்

மழைநீர் தேங்கியுள்ள சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள்.திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீரில் தனது வாடிக்கையாளருடன் பயணத்தை தொடரும் ரிக்‌ஷாக்காரர்.கனமழையை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த சா... மேலும் பார்க்க