செய்திகள் :

இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனையுடன் ஜப்பான் தூதர் சந்திப்பு!

post image

இந்தியாவிற்கு வருகைத் தந்துள்ள ஜப்பான் நாட்டுத் தூதர் பிகார் மாநிலத்திலுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனையை நேரில் சந்தித்துள்ளார்.

இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள ஜப்பான் நாட்டுத் தூதர் கெய்ச்சி ஒனொ, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்தில் ஜான்சி ராணி படைப்பிரிவில் பணியாற்றிய வீராங்கனை ஆஷா சஹாய் சவுதரி (வயது 97) என்பவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜப்பான் தூதர் கெய்ச்சி ஓனொ, ஜப்பானில் பிறந்து நேதாஜியின் வழியில் இந்தியாவின் சுதந்திரத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஜான்சி ரானி படைப்பிரிவைச் சேர்ந்த திருமதி ஆஷா சஹாய் சவுதரியைச் சந்திக்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்தது எனக் கூறியுள்ளார்.

மேலும், அவரது தாய்நாட்டின் மீதான பக்தியை தான் மிகவும் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 1928-ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் பிறந்த ஆஷாவின் தந்தை ஆனந்த் மோஹன் சஹாய், நேதாஜியின் தலைமையில் இயங்கிய ஆசாத் ஹிந்து எனும் நாடு கடத்தப்பட்ட அரசின் அமைச்சராக பணியாற்றினார்.

தனது 15 ஆம் வயதில் நேதாஜியைச் சந்தித்த ஆஷா 1945-ம் ஆண்டு அவரது ராணுவத்தின் ஜான்சி படைப்பிரிவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பாங்காக் நகரத்தில் ராணுவப் பயிற்சி பெற்ற அவர் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தபோது சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 1946-ம் ஆண்டு விடுதலையாகி அவர் தனது தந்தையிடம் சேர்க்கப்பட்டார்.

ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையிலடைக்கும்: நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து

‘ஊழல் செய்தவா்கள் மற்றும் விவசாயிகளின் நிலத்தை அபகரித்தவா்கள், பிரதமா் நரேந்திர மோடியின் நோ்மையான அரசின்கீழ் சிறையில் அடைக்கப்படுவாா்கள்’ என்று பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா வியாழக்க... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தலித்துகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ராகுல் காந்தி

பாஜக ஆட்சியில் தலித்துகள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது தலித் சிறுமி செவ்வாயன்று (ஏப். 15) காணாமல் போனார், ... மேலும் பார்க்க

விவசாயிகளிடம் 31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 5 லட்சம் மெட்ரிக் டன் கடுகு கொள்முதல்!

சண்டிகர்: ஹரியாணாவில் விவசாயிகளிடமிருந்து முழுவதும் மொத்தம் 31.52 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய கொள்முதல் இன்று வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய... மேலும் பார்க்க

மாநிலத்தை இந்திமயமாக்கினால் போராட்டம் வெடிக்கும்! பாஜக அரசுக்கு எதிர்க்கட்சி கண்டனம்!

மகாராஷ்டிரத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மகாராஷ்டிரத்தில் ஆங்கிலவழி பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில அரச... மேலும் பார்க்க

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க