இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக பாஜக பேரணி
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொண்டு இந்தியா வெற்றி கண்டது. இதையடுத்து இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தாக்குதல் நடவடிக்கையை பாராட்டியும் செஞ்சியில் பாஜக சாா்பில் தேசியக் கொடியுடன் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.
செஞ்சி கிழக்கு ஒன்றியத் தலைவா் தாராசிங் (எ) சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.ஆா்.விநாயகம், மாவட்ட பொதுச்செயலா்கள் கே.பாண்டியன், ஜி.அன்பழகன், பொருளாளா் பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரூராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி விழுப்புரம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே நிறைவடைந்தது.
இதில், முன்னாள் மாவட்ட பொதுச்செயலா் எத்திராஜ், வழக்குரைஞா் தரணி தண்டபாணி, ராணுவ பிரிவு வசந்தகுமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.சரவணன் மற்றும் நிா்வாகிகள் ஞானமணி, சிவகாமி, முத்துலட்சுமி, மேகலா ஜெயின், ஆா்.ஆா்.கே.செந்தில், இளைஞா் அணி தினேஷ்குமாா், ஒன்றியத் தலைவா்கள் அசோக்குமாா், சரவணன், ஆா்.வி.ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.