செய்திகள் :

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் அம்பானி!

post image

உலகின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி பின்னுக்குத் தள்ளப்பட்டாலும், தொடர்ந்து இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக நீடிக்கிறார்.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார், உலகளவில் ஐந்தாவது பணக்காரப் பெண்ணாக முன்னேறியுள்ளார். மேலும், உலகப் பணக்காரப் பெண்களின் பட்டியலில் டாப் 10 இடத்தைப் பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

புதிய கோடீஸ்வரர்கள்

இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களின் 5 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆவர். புதுதில்லியைச் சேர்ந்த இருவரும், பெங்களூரு, புணே மற்றும் அகமதாபாத் நகரங்களைச் சேர்ந்தவர்களும் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்திய பணக்காரர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 34,514 கோடியாக உள்ளது. இது சீனாவின் சராசரியான ரூ. 29,027 கோடியைவிட அதிகம்.

2025 ஆம் ஆண்டில் புதிதாக 45 கோடீஸ்வரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 165 கோடீஸ்வரர்கள் மட்டுமே இருந்தனர்.

இந்திய கோடீஸ்வரர்களின் மொத்தம் மதிப்பு 950 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்திய மதிப்பின்படி, ரூ. 81.29 லட்சம் கோடி. இது இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காகும். செளதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகும்.

அமெரிக்கா முதலிடம்

உலகளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 870 பேருடன் அமெரிக்கா முதலிடத்திலும், 823 பேருடன் சீனா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.

129 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நகரின் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை 90 கோடீஸ்வரர்களுடன் மும்பை முதலிடத்தில் இருக்கிறது. ஆசியாவின் கோடீஸ்வரர்கள் அதிகம் கொண்ட நகரங்களாக சீனாவின் ஷாங்காய் (92), பெய்ஜிங் (91) இருக்கிறது.

அமெரிக்க கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 27 சதவிகிதம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 10%, சீனாவில் 9% அதிகரித்து வருகின்றது.

அம்பானியின் சொத்து மதிப்பு

நாட்டின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 91.8 பில்லியன் டாலர் ஆகும். இந்திய மதிப்பின்படி, ரூ. 7.85 லட்சம் கோடியாகும். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார்.

கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 53.5 பில்லியன் டாலராக (ரூ.4.57 லட்சம் கோடி) உள்ளது. உலகளவில் 27-வது இடத்தில் இருக்கிறார்.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், உலகளவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலர்களாகும்.

இதையும் படிக்க : அதிரடியாக உச்சம் தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் மக்கள்!

ஏப்ரல் - ஜூன் வெப்ப அலையின் தாக்கம் எத்தனை நாள்கள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் - ஜூன் வரை அதிகமாக இருக்குமென்றும், நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்... மேலும் பார்க்க

மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாலியல் புகாரில் கைது!

மகா கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா என்ற இளம்பெண்ணுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

இனி அபராதம் செலுத்தவில்லை எனில் ஓட்டுநர் உரிமம் ரத்து! - வருகிறது புதிய விதிகள்!!

சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 3 மாதங்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகள... மேலும் பார்க்க

மோடி அரசால் வணிகமயமாகும் கல்வி முறை! -சோனியா காந்தி

புது தில்லி: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ‘கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (சென்ட்ரலைசேசன், கமர்சியலைசேசன... மேலும் பார்க்க

2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எ... மேலும் பார்க்க

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபர் கைது!

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கேரளத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்... மேலும் பார்க்க