செய்திகள் :

இந்தியாவில் இணையசேவை! ஒப்புதல் பெற்ற ஸ்டார்லிங்க்!

post image

இந்தியாவில் சேவையைத் தொடங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், 7,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களின் தொகுப்பு மூலம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செயற்கைக்கோள் சேவைகளை வழங்குகிறது.

இந்த நிறுவனம், இந்தியாவிலும் தனது சேவையைத் தொடங்க 2 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்து வந்தது. இந்த நிலையில், இந்தியாவில் சேவையைத் தொடங்குவதற்கான கோரிக்கைக்கு தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல் அளித்தது.

இருப்பினும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் இறுதி அங்கீகாரம் தேவைப்படுகிறது. இந்த இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டால், இந்தியாவிலும் ஸ்டார்லிங்க் சேவை தொடங்கி விடும்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலம் உலகம் முழுவதுமுள்ள கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்துடன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

உச்சபட்ச போர்ப் பதற்றம்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

இந்தியாவின் எல்லைப் புற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: இருளில் தவிக்கும் பஞ்சாப், ராஜஸ்தான்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள ஏவுகணைத் தாக்குதலால் போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு- காஷ்மீரின் முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால்,... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் விமானப் படையில் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜம்மு மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் எஃப்-... மேலும் பார்க்க

ஜம்முவில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்: நடுவானில் தாக்கி அழித்த இந்திய ராணுவம்!

ஜம்முவில் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில் நடுவானிலேயே இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு அனைவரும் உஷார் நிலையில் உள்ளனர். மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் அன்று பிறந்த பெண் குழந்தை! சிந்தூரி என பெயரிட்ட பெற்றோர்!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைபெற்ற நாளில் பிறந்த பெண் குழந்தைக்கு பிகாரைச் சேர்ந்த பெற்றோர் சிந்தூரி எனப் பெயரிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காமில்... மேலும் பார்க்க

பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.‘உச்சநீதிமன்றம் சட்டம் இயற்றினால், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையை மூடிவிட வேண்டும். நாட்டில் நிகழும் மதச் சண்டைகளுக்கு தலைம... மேலும் பார்க்க