செய்திகள் :

'இந்தியாவில் குறைந்தது; பாகிஸ்தானில் உயர்வு' - வெளியான ஏழ்மை புள்ளிவிவரங்கள்; இந்தியா, பாக் ஒப்பீடு!

post image

கடந்த சனிக்கிழமை (ஜூன் 5), உலக வங்கி இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளன.

இந்தத் தரவுகள் 2011-12 நிதியாண்டோடு 2022-23 நிதியாண்டை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தரவுகளில் பணவீக்கத்திற்கு ஏற்ப, மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருப்பவர்களின் வருமானத்தை ஒரு நாளைக்கு 2.15 டாலரில் இருந்து 3 டாலர்களாக உயர்த்தியுள்ளது உலக வங்கி.

இந்தத் தரவுகளின் படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஓர் ஒப்பீட்டை பார்க்கலாம்...

2011-12 நிதியாண்டில், மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருந்த 27.1 சதவிகிதத்தினர் 2022-23 நிதியாண்டில் 5.3 சதவிகிதமாக குறைந்துள்ளனர்.

உலக வங்கி
உலக வங்கி

2011-12 நிதியாண்டில், 344.47 மில்லியன் பேர் இந்தியாவில் மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருந்தனர். 2022-23 நிதியாண்டில், 75.24 மில்லியன் பேர் என மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது, இடைப்பட்ட காலக்கட்டத்தில், கிட்டத்தட்ட 269 மில்லியன் பேர் இந்தியாவில் மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.

பாகிஸ்தானை பொறுத்தவரை, 2017 மற்றும் 2021 ஆண்டுகளின் இடையே, அவர்களின் மிகுந்த ஏழ்மைக் கோடு சதவிகிதம் 4.9 சதவிகிதத்தில் இருந்து 16.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த ஏழ்மை சதவிகிதம் பாகிஸ்தானில் 39.8 சதவிகிதத்தில் இருந்து 44.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தத் தரவுகளில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 4.2 டாலர் வருமானம் என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏன் இந்த ஏற்ற, இறக்கங்கள்?

மேலே குறிப்பிட்டுள்ள 11 ஆண்டு காலக்கட்டத்தில், இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக, இந்தக் காலக்கட்டத்தில், வளரும் பொருளாதாரமாகவும், தற்சார்புடையதாகவும் உயர்ந்துள்ளது.

ஆனால், பாகிஸ்தான் 2017 முதல் 2021 வரை ஐந்து ஆண்டுகளில்...

சர்வதேச நாணய நிதியத்திடம் 25 நிலுவைகளில் 44.57 பில்லியன் டாலர்கள் கடன்கள்;

உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, இஸ்லாமிய வளர்ச்சி வங்கியில் கிட்டத்தட்ட 38.8 பில்லியன் டாலர் கடன்கள்;

சீனாவிடம் இருந்து 25 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட கடன்கள்;

பாண்டுகள் மூலம் 7.8 பில்லியன் டாலர்கள் கடன்கள்;

சவுதி அரேபியா, பாரீஸ் கிளப் போன்றவற்றில் இருந்து பல பில்லியன் கடன்கள் வாங்கியுள்ளது.

இந்தியாவிற்கும் பல கடன்கள் உள்ளது தான். ஆனால், பாகிஸ்தானை ஒப்பிடுகையில் குறைவு தான்.

'2026 தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம், ஆனா..!' - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "தமிழகத்திற்கு பாக்கியில்லாமல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம... மேலும் பார்க்க

கீழடி : 'தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்கும் வேலைகளை செய்கிறது பாஜக' - வைகோ

கீழடி அகழ்வாய்வு அறிக்கையை பாஜக இருட்டடிப்பு செய்ய முயலுகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒன்றிய அரசை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவி... மேலும் பார்க்க

'திமுகவை அகற்றுவேன் என்று கூறியவர்களை காலமே விழுங்கியிருக்கிறது' - அமித் ஷாவை சாடிய நாஞ்சில் சம்பத்

கிருஷ்ணகிரியில் நேற்று திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அமித் ஷாவின் சென்னை விசிட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பேசியதாவது..."தமிழில் பேசத் தெ... மேலும் பார்க்க

கீழடி ஆய்வறிக்கை ஏன் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை? - விளக்கும் மத்திய அமைச்சர், எழும் விமர்சனங்கள்

சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், தொல்லிய... மேலும் பார்க்க

`கூட்டணி ஆட்சி?' - குழப்பத்தில் ADMK | தொடரும் தோட்டத்து வீடு கொலை | DMK | Imperfect Show 10.6.2025

* “பிரதமருக்கு இன்ஸ்பிரேஷன் திருக்குறள்தான்..” - ஆளுநர் ரவி * “பொதுமக்களுக்கு ஒரு விதி, ஒன்றிய அமைச்சருக்கு ஒரு விதியா?” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி* “கூட்டணி ஆட்சி குறித்து எடப்பாடி ப... மேலும் பார்க்க