செய்திகள் :

நேற்று ஓய்வு.. இன்று நியூயார்க் அணி கேப்டன்..! பூரனின் புதிய பரிமாணம்!

post image

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அடுத்த நாளே நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதிலேயே அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இந்த திடீர் முடிவுக்கான காரணங்கள் குறித்து பூரன் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் தொடருக்கான நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக பூரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு அணியாக இந்த நியூயார்க் அணி இருக்கிறது.

ஐபிஎல்லில் லக்னௌ அணிக்கு விளையாடிவரும் நிக்கோலஸ் பூரன், லீக் போட்டிகளில் மிகவும் ஆபத்தான வீரராக கருதப்படுகிறார். இவர் இந்தாண்டு ஐபிஎல் தொடரிலேயே 40 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். மேலும், சிபிஎல், எம்எல்சி தொடர்களிலும் விளையாடி வருகிறார்.

2023 ஆம் ஆண்டில் எம்எல்சி தொடரில் அதிக ரன்களை(388) குவித்திருந்தார் பூரன். நிகழாண்டுக்கான தொடர் வருகிற வியாழக்கிழமை தொடங்கவிருக்கிறது. எம்ஐ நியூயார்க் அணியில் குயிண்டன் டிக்காக், பொல்லார்ட், ரஷீத்கான் என நட்சத்திர பட்டாளமே குவிந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையுடன் 2275 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1983 ரன்கள் குவித்திருக்கிறார். ஆனால், அவர் ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டி20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து: தொடரும் புரூக்கின் வெற்றிப் பயணம்!

கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடி... மேலும் பார்க்க

பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போ... மேலும் பார்க்க

2-ஆம் நாள் உணவு இடைவேளை: பெடிங்ஹாமின் நிதான ஆட்டத்தால் தெ.ஆ. எழுச்சி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் சேர்ந்து லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய ஏபிடி வில்லியர்ஸ்..!

ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய விடியோ வைரலாகியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள்... மேலும் பார்க்க

ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன். நான் என்ன பைத்தியக்காரனா?” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வெ... மேலும் பார்க்க

டபிள்யூடிசி: முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேசியுள்ளார். டபிள்யூடிசி இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212-க்கு ஆல... மேலும் பார்க்க