தேனிலவு கொலை: கூலிப்படைக்கு சோனம் கொடுத்த தொகை எத்தனை லட்சம் தெரியுமா?
இந்தூா்/ஷில்லாங்: மேகாலய மாநிலத்துக்கு தேனிலவு கொண்டாட அழைத்துச் சென்று, கூலிப் படையினா் மூலம் கணவரை தீா்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான சோனம், கூலிப்படையினருக்கு ரூ.20 லட்சம் கொடுத்திருப்பது தெரிய வந்திருப்பதாக மேகாலய காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலைச் சம்பவம் நடந்தபோதே, கணவரின் பர்ஸிலிருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்து, அவரைக் கொலை செய்த கூலிப்படையினருக்கு சோனம் நேரடியாகக் கொடுத்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சோ்ந்த சோனம் (24) என்பவருக்கும் தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷிக்கும் (28) மே 11-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. சில நாள்களுக்குப் பின் மேகாலயத்துக்கு தேனிலவு சென்றனர் புதுமண தம்பதி.
தேனிலவு சென்ற இடத்தில் மே 23-ஆம் தேதி அறையை காலி செய்துவிட்டுப் புறப்பட்ட பிறகு இருவரும் மாயமாகினா். இது தொடா்பாக குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் மேகாலய காவல் துறையினா் இருவரையும் தேடினா்.
இதனிடையே, நொங்கிரியாட் கிராமத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அருவிப் பள்ளத்தாக்கில் அழுகிய நிலையில் ராஜா ரகுவன்ஷியின் உடல் கடந்த ஜூன் 2-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அதேநேரம், சோனம் காணாமல் போனார்.