செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: ஒருவர் உயிர்பிழைத்ததாக வரும் தகவல்? - நிலைமை என்ன?

post image

குஜராத்தின் தலைநகர் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 என் கொண்ட 787-8 போயிங் ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் மருத்துவ மாணவர்கள் விடுதியின் மீது விமானம் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

Ahmedabad Airplane Crash
Ahmedabad Airplane Crash

இந்த விமானத்தில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 169 பயணிகள், 53 பிரிட்டிஷ் பயணிகள், 7 போர்ச்சுகீசிய பயணிகள், 1 கனடா பயணி மற்றும் இரண்டு பைலட்டுகள், 10 விமானப் பணியாளர்கள் என 242 பேர் பயணித்தனர். இந்த விபத்து நடந்த உடனேயே, மீட்புப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் இறங்கினர். மேலும், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அவரைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பூபேந்திர படேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். இன்னும், உயிரிழப்புகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் உயிர்பிழைத்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து, ANI செய்தி நிறுவனம் எக்ஸ் தளத்தில், அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் செல்போனில் தெரிவித்ததாக, "11A இருக்கையில் பயணித்த பயணி உயிர் பிழைத்திருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறப்பு எண்ணிக்கை குறித்து இன்னும் எதுவும் கூற முடியாது. விமானம் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்." என்று பதிவிட்டிருக்கிறது.

அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த பாஜக தலைவர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவரது மரணம் 1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது பாக் ஜெட் விமானத்தால் சுட்டு வீழ்த்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் பலியான சோகம்

நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களி... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது?ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்

இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க