செய்திகள் :

ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து போயிங் பங்குகள் 8% சரிவு!

post image

ஆமதாபாத்திலிருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் (ஜூன் 12) அமெரிக்க சந்தையில் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் பங்குகள் 8% சரிந்து வர்த்தகமாயின.

விமான கண்காணிப்பு தளமான ஃப்ளைட்ராடார்-24, விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்றும், இது சேவையில் உள்ள மிகவும் அதிநவீன பயணிகள் விமானங்களில் ஒன்றாகும் என்றது.

ஆமதாபாத்திலிருந்து விமானம் லண்டனுக்குப் புறப்பட்டு சென்று கொண்டிருந்த வேளையில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து நொறுங்கிதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து போயிங் தனது அறிக்கையில் அறிவித்திருப்பதாகவும் மேலும் இது குறித்து தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தது.

சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில், போயிங்கின் பங்குகள் சுமார் 8 சதவிகிதம் சரிந்து பங்குகள் $196.52 ஆக வர்த்தகமானது.

இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி 1% சரிந்து முடிவு!

சென்செக்ஸ் 573.38 புள்ளிகளுடனும், நிஃப்டி 169.60 புள்ளிகளுடன் சரிந்து முடிவு!

மும்பை: ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஒரு சிறிய மீட்சிக்கு பிறகு சரிந்து முடிந்தன... மேலும் பார்க்க

ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64% பங்குகளை விற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

புதுதில்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நேற்று (ஜூன் 12) ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவிகித பங்குகளை விற்ற நிலையில், அதனை எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ரூ.7,703 கோடிக்கு வாங்கியுள்ளதாக... மேலும் பார்க்க

பழசுக்கு புதுசு... ஹூண்டாய் அல்கஸார் கார்ப்பரேட் அறிமுகம்!

ஹூண்டாயின் அல்கஸாரில் புதிதாக கார்ப்பரேட் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது.ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா ரக கார்கள், 2021 ஆம் ஆண்டில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், கிரெட்டாவின் அல்கஸார் காரை நிற... மேலும் பார்க்க

பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகம்!

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 9.30 மணி நிலவரப்படி, 867 புள்ளிகள் சரிந்து 80,824.98 ஆக வர்த்த... மேலும் பார்க்க

25 கோடி கிலோவாக உயா்ந்த தேயிலை ஏற்றுமதி

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2024-ஆம் ஆண்டில் 25.467 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது.இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா்... மேலும் பார்க்க

வட்டி விகிதத்தை குறைத்த மகாராஷ்டிர வங்கி!

புது தில்லி: வீடு, கார், கல்வி மற்றும் பிற கடன்களுக்கான சில்லறை வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக அரசுக்குச் சொந்தமான மகாராஷ்டிர வங்கி தெரிவித்துள்ளது.புனேவைச் சேர்ந்த கடன் வழங்... மேலும் பார்க்க