செய்திகள் :

Ahmedabad Plane Crash : 'விமானி பேசிய கடைசி வார்த்தை!' - அது என்ன 'Mayday'?

post image

'Mayday' என்றால் என்ன?

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் 'Take Off' ஆன சில நொடிகளிலேயே அருகிலிருந்த மேவானி குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கப்போவதை அறிந்த விமானி 'Mayday' என கடைசியாக கூறியிருக்கிறார். விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை இது ஒரு அவசர கால அழைப்பு.

Ahmedabad Plane Crash
Ahmedabad Plane Crash

'Mayday' என்றால் என்ன?

'Mayday' என்கிற வார்த்தை விமானப் போக்குவரத்தில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆபத்து கால குறியீட்டு வார்த்தை ஆகும். இந்த 'Mayday' என்கிற வார்த்தை 'm'aider' என்கிற பிரெஞ்சு வார்த்தையிலிருந்தே பிறந்தது. இதற்கு 'help me - உதவி செய்யுங்கள்.' எனப் பொருள். லண்டன் விமான நிலையைத்தை சேர்ந்த ரேடியோ ஆபிசர் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி மாக்ஃபோர்ட் என்பவரே இதை அறிமுகப்படுத்தினார். 1927 முதல் அவசரகால குறியீட்டு அழைப்பாக இந்த 'Mayday' என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இயந்திரக் கோளாறு, தீ விபத்து, விமானக் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை போன்ற கையை மீறி செல்லும் அவசரச் சூழல்களில் விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு 'Mayday, Mayday, Mayday' என மூன்று முறை தகவல் சொல்வார்கள். இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒட்டுமொத்த கவனமும் அந்த விமானத்தின் மீது குவிக்கப்படும். அவசர காலங்களில் என்னென்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமோ அதையெல்லாம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து செய்துவிடுவார்கள். மருத்துவக்குழுவினர், மீட்புப்படையினர் என எல்லாருமே தயாராகிவிடுவார்கள்.

Ahmedabad Plane Crash
Ahmedabad Plane Crash

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானியும் முறையாக 'Mayday' அழைப்பை விடுத்திருக்கிறார்.

அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த பாஜக தலைவர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவரது மரணம் 1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது பாக் ஜெட் விமானத்தால் சுட்டு வீழ்த்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் பலியான சோகம்

நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களி... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது?ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்

இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க