செய்திகள் :

Ahmedabad Plane Crash : 'இறந்தவர்களுக்கு 1 கோடி இழப்பீடு!' - டாடா நிறுவனம் அறிவிப்பு!

post image

'அகமதாபாத் விமான விபத்து!'

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்திய விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. 242 பேர் இந்த விமானத்தில் பயணித்திருந்தனர். இதில் 170 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்தி வரும் டாடா குழுமம் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டு தொகையை அறிவித்திருக்கிறது.

Ahmedabad Plane Crash
Ahmedabad Plane Crash

இதுதொடர்பாக டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டிருக்கும் பதிவில், 'ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில்  171 பேர் இறந்துள்ள சம்பவத்தால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம்.

இந்த தருணத்தில் எங்களின் துக்கத்தை வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் எங்களின் பிரார்த்தனைகளை  உரித்தாக்கிக் கொள்கிறோம்.

இந்த துயரத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் ₹1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மேலும், பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டுமானத்திற்கு ஆதரவு வழங்குவோம்.

இந்த சோகமான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன்  உறுதியாக நிற்கிறோம்.' எனக் கூறியிருக்கிறார்.

அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த பாஜக தலைவர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவரது மரணம் 1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது பாக் ஜெட் விமானத்தால் சுட்டு வீழ்த்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் பலியான சோகம்

நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களி... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது?ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்

இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க