என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன்: ராமதாஸ்
Ahmedabad Plane Crash : 'இறந்தவர்களுக்கு 1 கோடி இழப்பீடு!' - டாடா நிறுவனம் அறிவிப்பு!
'அகமதாபாத் விமான விபத்து!'
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்திய விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. 242 பேர் இந்த விமானத்தில் பயணித்திருந்தனர். இதில் 170 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்தி வரும் டாடா குழுமம் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டு தொகையை அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டிருக்கும் பதிவில், 'ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 171 பேர் இறந்துள்ள சம்பவத்தால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம்.
இந்த தருணத்தில் எங்களின் துக்கத்தை வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் எங்களின் பிரார்த்தனைகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
We are deeply anguished by the tragic event involving Air India Flight 171.
— Tata Group (@TataCompanies) June 12, 2025
No words can adequately express the grief we feel at this moment. Our thoughts and prayers are with the families who have lost their loved ones, and with those who have been injured.
Tata Group will…
இந்த துயரத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் ₹1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மேலும், பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டுமானத்திற்கு ஆதரவு வழங்குவோம்.
இந்த சோகமான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உறுதியாக நிற்கிறோம்.' எனக் கூறியிருக்கிறார்.