Aamir Khan: `என்னுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும்' - கூலியில் நடிப்பதை உறுதி செய்த அமீர் கான்
'வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.
'லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 'கூலி' திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
தற்போது அமீர்கான் அதனை உறுதி செய்திருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அமீர்கான்," 'கூலி' திரைப்படத்தில் என் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும்.

கண்டிப்பாக அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள்" என்று கூறியிருக்கிறார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளதையும் அமீர் கான் அறிவித்திருக்கிறார்.