செய்திகள் :

இந்து, பெளத்த, சீக்கியரைத் தவிர பிறரின் எஸ்சி சான்றிதழ் ரத்து: ஃபட்னவீஸ்

post image

இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைத் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் போலியாக எஸ்சி சான்றிதழ் பெற்றிருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

அரசு வேலைகள் உள்ளிடவற்றில் இடஒதுக்கீட்டின் கீழ் ஆதாயம் பெற்றிருந்தாலும் அந்த நபர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

போலியாக எஸ்சி சான்றிதழைப் பெற்ற அந்த நபர் தேர்தலில் வெற்றிப் பெற்று இருந்தாலும், தேர்தல் வெற்றி செல்லாததாக அறிவிக்கப்படும் என்று பேரவைக் கூட்டத்தில் ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் ஃபட்னவீஸ் பேசும்போது, பட்டியல் சாதியினர் இடஒதுக்கீட்டை இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பெற முடியும், மற்ற மதத்தினரைச் சேர்ந்தவர்கள் அனுபவிக்க முடியாது என்பதை கடந்த நவம்பர் 26, 2024 அன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.

இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைத் தவிர மற்ற மதத்தினர் போலியாக எஸ்சி சான்றிதழ் பெற்று அரசு வேலைகள் உள்ளிடவற்றில் இடஒதுக்கீட்டின் கீழ் ஆதாயம் பெற்றிருந்தால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் சாதிச் சான்றிதழ்களும் உரிய நடைமுறைகளுடன் ரத்து செய்யப்படும், அவர்கள் பெற்ற நிதியுதவிகளும் திரும்பப் பெற பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நிகழாண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிரத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்படும் என்று மாநில உள்துறை (ஊரகப் பகுதி) இணையமைச்சர் பங்கஜ் போயர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்தச் சட்டத்தை வகுக்க மாநில காவல் துறை டிஜிபி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் நிகழாண்டு குளிர்கால கூட்டத்தொடரில் அந்தச் சட்டம் இயற்றப்படும் என்றும் அந்தச் சட்டம் பிற 10 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைவிட கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மேற்கு வங்கத்தில் ரயில் மோதியதில் 3 யானைகள் பலி !

Maharashtra Chief Minister Devendra Fadnavis said that if people belonging to religions other than Hindu, Buddhist and Sikh religions have obtained fake SC certificates, they will be cancelled.

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர்!

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண்... மேலும் பார்க்க

ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க

கேஎஃப்சி உணவகத்தை மூடவைத்த இந்து அமைப்பினர்!

உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க