செய்திகள் :

இனி, மெரினாவுக்குச் செல்ல கட்டணமா?

post image

மெரினா கடற்கரைக்குச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என்று வதந்திகள் பரவிய நிலையில், இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள 50 ஏக்கரில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, விரைவில் நீலக் கொடி மண்டலமாக அப்பகுதி மாறவுள்ளது.

மக்கள் அதிக அளவில் கூடும் புகழ்பெற்ற இடங்களுக்கு சுற்றுச்சூழல் அங்கீகாரமான (புளூ லேபிள்) நீலக் கொடி வழங்கப்படும். மே மாத இறுதிக்குள் உலகளாவிய சுற்றுச்சூழல் நீலக் கொடி சான்றிதழ் மெரினாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாய்ந்த இருக்கைகள், சிற்றுண்டிச்சாலை, வெளிப்புற ஜிம்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு, நவீன நடக்கும் பாதைகள் ஆகியவை ரூ. 6 கோடி நிதியுதவியுடன் அமையவுள்ளன.

இதனால் கடற்கரைக்குச் செல்ல இனி கட்டணம் வசூலிக்கப்படும் என செய்திகள் வெளியாகின. இதனிடையே இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பேசியதாவது,

’’மெரினா நீலக் கொடி கடற்கரை திட்டத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவல் தவறானது. மெரினா கடற்கரையை இயற்கையான சூழலில் பொதுமக்கள் பயன்படுத்தவே நீலக் கொடி கடற்கரைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பராமரிப்புக்காக மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் செய்தி உண்மை அல்ல.

கோவளம் கடற்கரை பகுதி ஊராட்சிக்குள் வருவதால் பராமரிப்பு பணிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ என விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க | ஏப். 17-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

மாணவர்கள் மோதலைத் தடுக்க ஏப் 24-இல் முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், அவர்களது மனதை செம்மைப்படுத்தும் பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் சட்டப் பேரவையில் ஏப்.24-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ள... மேலும் பார்க்க

அன்புமணியுடன் வடிவேல் ராவணன், திலகபாமா சந்திப்பு

பாமக தலைவர் அன்புமணியை, அக்கட்சியின் பொதுச்செயலர் வடிவேல் ராவணன், திலகபாமா ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.அன்புமணியை பாமக தலைவர் பதவியிலிருந்து நீக்கியதாகவும், தானே கட்சியின் தலைவராக தொடர... மேலும் பார்க்க

செல்லூா் ராஜூ பேச்சால் பேரவையில் சலசலப்பு

நாங்கள் (அதிமுக) வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதால்தானே உங்களை (திமுக) ஆட்சியில் மக்கள் அமர வைத்துள்ளனா் என்று அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜூ பேசியதால், பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. சட்டப் பேர... மேலும் பார்க்க

மத போதகா் ஜான் ஜெபராஜ் கைது: முன் ஜாமீன் மனு தள்ளுபடி

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கிறிஸ்தவ மத போதகா் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணை மூன்று மாதங்களில் முடிக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜ... மேலும் பார்க்க

என்சிஇஆா்டி மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சி: காங்கிரஸ் கண்டனம்

என்சிஇஆா்டி மூலம் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய... மேலும் பார்க்க