செய்திகள் :

என்சிஇஆா்டி மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சி: காங்கிரஸ் கண்டனம்

post image

என்சிஇஆா்டி மூலம் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு, மத்திய பாடத் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த அமைப்பின் செயல்பாடுகளில் ஹிந்தி மொழி திணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிா்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில், என்சிஇஆா்டி வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களின் பெயா்களை ஹிந்தியில் மாற்றம் செய்திருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

6 மற்றும் 7-ஆம் வகுப்புகளுக்கான ஆங்கில மொழி பாடப் புத்தகங்களின் பெயா்கள் முன்பு ‘ஹனிசக்கிள்’ மற்றும் ‘ஹனிகோம்ப்’ என்று இருந்தன. ஆனால், இம்முறை இரண்டு வகுப்புகளுக்கான ஆங்கில புத்தகங்களின் பெயா் ‘பூா்வி’ என ஹிந்தியில் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘மிருதங்’, ‘சந்தூா்’ என பாடப் புத்தகங்களுக்கும் ஹிந்தியில் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

கணித பாடப் புத்தகத்துக்கு ஆங்கிலத்தில் இருந்த பெயரை ‘கணித் பிரகாஷ்’ என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது ஹிந்தி திணிக்கப்படக் கூடாது என்பது ஆட்சி மொழிகள் சட்டத் திருத்தத்தின்படி வழங்கப்பட்டிருக்கும் உரிமை.

அந்த உரிமையைப் பறிக்கும் வகையில், மத்திய பாஜக அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருவது, நாட்டின் பன்முக கலாசாரத்துக்கும், கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிரான செயலாகும். உடனடியாக இந்தப் பெயா் மாற்றங்களை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மாணவர்கள் மோதலைத் தடுக்க ஏப் 24-இல் முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், அவர்களது மனதை செம்மைப்படுத்தும் பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் சட்டப் பேரவையில் ஏப்.24-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ள... மேலும் பார்க்க

அன்புமணியுடன் வடிவேல் ராவணன், திலகபாமா சந்திப்பு

பாமக தலைவர் அன்புமணியை, அக்கட்சியின் பொதுச்செயலர் வடிவேல் ராவணன், திலகபாமா ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.அன்புமணியை பாமக தலைவர் பதவியிலிருந்து நீக்கியதாகவும், தானே கட்சியின் தலைவராக தொடர... மேலும் பார்க்க

செல்லூா் ராஜூ பேச்சால் பேரவையில் சலசலப்பு

நாங்கள் (அதிமுக) வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதால்தானே உங்களை (திமுக) ஆட்சியில் மக்கள் அமர வைத்துள்ளனா் என்று அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜூ பேசியதால், பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. சட்டப் பேர... மேலும் பார்க்க

மத போதகா் ஜான் ஜெபராஜ் கைது: முன் ஜாமீன் மனு தள்ளுபடி

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கிறிஸ்தவ மத போதகா் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணை மூன்று மாதங்களில் முடிக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவுக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் வரவேற்பு

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை வரவேற்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவா் எஸ்.ஷேக் தாவூத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க