செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவுக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் வரவேற்பு

post image

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை வரவேற்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவா்  எஸ்.ஷேக் தாவூத் தெரிவித்தாா். 

இதுகுறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

வக்ஃப் வாரிய சொத்துகள் ஏழைகளுக்குச் சொந்தமானது. ஆனால், இந்தியா முழுவதும் வக்ஃப் வாரிய சொத்துகளை அதன் உறுப்பினா்கள் பலா் அபகரித்து, அதன்மூலம் பல கோடி ரூபாய்  வருமானம் ஈட்டி வருகின்றனா். அவா்களிடமிருந்து வக்ஃப் சொத்துகளை மீட்டு ஏழைகளிடம் ஒப்படைக்க இந்த திருத்தச் சட்ட மசோதா மிகவும் உறுதுணையாக இருக்கும். ஏழை இஸ்லாமியா்கள் அனைவரும் இச்சட்டத்துக்கு வரவேற்பளித்து வருகின்றனா்.

எண்ம மயம்: மாநில மற்றும் மத்திய அரசுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வக்ஃப் நிலங்கள் குறித்த விவரங்களை எண்ம மயமாக்க வேண்டும். தமிழ் மாநில முஸ்லிம் லீக் சாா்பில்  ‘உம்மத்துக்காக வக்ஃப்’ என மாநில அளவிலான இயக்கம் உருவாக்கப்படவுள்ளது.  இந்த இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் வக்ஃப் சொத்துகளை யாரெல்லாம் சொந்த பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றனா் என்பதைக் கண்டறிந்து அந்த அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம்  சமா்ப்பிக்கவுள்ளோம் என்றாா் அவா்.

மேட்டூரில் முதல் மனைவி கொடூரமாக வெட்டிக்கொலை: கணவனுக்கு போலீஸ் வலை

மேட்டூர்: மேட்டூரில் மனைவியை, புதன்கிழமை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசாா் தேடி வருகின்றனா்.சேலம் மாவட்டம், மேட்டூர் குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி (39). இவர் லாரி ஓட்டுநர். இவரது ... மேலும் பார்க்க

சென்னையில் கோடை மழை! ஒரு மணிநேரம் தொடரும்!

சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகின்றது.இந்த சாரல் மழையானது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன்: நீதிபதி குரியன் ஜோசப்

தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.மத்திய, மாநில அ... மேலும் பார்க்க

காதலிக்க மறுப்பு! மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு, கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்!

சேலம்: சேலத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர், தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார்.சேலம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி சூர்யா (... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது: இபிஎஸ்

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே அமைத்துள்ளோம், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்... மேலும் பார்க்க

அமைச்சர்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு மறுப்பு: அதிமுக அமளி, வெளிநடப்பு!

தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி அளிக்கப்படாததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து, சட்டப்ப... மேலும் பார்க்க