செய்திகள் :

பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது: இபிஎஸ்

post image

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே அமைத்துள்ளோம், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தொடர்பாக தற்போதைக்கு எதுவும் கூறமுடியாது எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்துகளுடைய கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் முயற்சித்தோம். அந்த முயற்சியில் முதல்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் சேரும். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். எதிர்க்கட்சிகளுக்கு ஏன் எரிச்சலாக இருக்கிறது.

கூட்டணி அரசு அமையும் என்று யாரும் கூறவில்லை. தில்லிக்கு பிரதமர் நரேந்திர மோடி என்றும் தமிழகத்துக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் அமித் ஷா கூறியிருந்தார். அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்றுதான் தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரத்தில் பங்கு என்று அமித் ஷா கூறவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : தமிழில் மட்டுமே அரசாணை: தமிழக அரசு உத்தரவு

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கொடுத்திருக்கும் வரதட்சணைப் புகார்! பின்னணி என்ன?

திருநெல்வேலியில் இயங்கி வரும் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா, தனது கணவர் வீட்டினர் மீது வரதட்சணைப் புகார் அளித்திருக்கிறார்.திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமை... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் 10 செ.மீ. மழை!

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெருவித்துள்ளார்.வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை உள்ளிட்ட புறநகர்... மேலும் பார்க்க

திருடியதாகக் கூறி விசாரணை: கோவை கல்லூரி மாணவி தற்கொலை!

கோவையில் தனியார் கல்லூரி கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மீது திருட்டுப்பழி சுமத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரப... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள த... மேலும் பார்க்க

வாழைப்பழத்தோல் போன்றது சநாதனம்: பேரவையில் சேகர்பாபு பேச்சு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வாழைப்பழத்தோல் போன்றதுதான் சநாதனம் என்று கூறினார்.தமிழக நிதிநிலை கூட்டத் தொடரில் இன்று மாற்றுத்திறனாளிகள் சமூக நல... மேலும் பார்க்க