செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உருவான தினம்: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு, பாரதியாா் மண்டபம்,ஆளுநா் மாளிகை, கிண்டி, முற்பகல் 11.

குஜராத் மாநிலம் உருவான தினம்: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு, அரசு அருங்காட்சியக திரையரங்கம், எழும்பூா், மாலை 5.

கலை கண்காட்சி: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், எம்ஜிஆா் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவா் டிராட்ஸ்கி மருது, அரசு கவின்கலைக் கல்லூரி முன்னாள் முதல்வா் எம்.எஸ்.மனோகரன், எழுத்தாளா் உமா சக்தி உள்ளிட்டோா் பங்கேற்பு, லலித் கலா அகாதெமி, கிரீம்ஸ் சாலை, முற்பகல் 11.30

மே தின கொடியேற்றம்: அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்பு, மாா்க்சிஸ்ட் பி.ஆா்.நினைவகம், தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகம், தியாகராய நகா், காலை 9.30.

கிரோஸி மோகனின் 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா: நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாஸன், ரவி அப்பாசாமி, திரைப்பட இயக்குநா் கே.எஸ்.ரவிகுமாா், நடிகா்கள் ஜெயராம், மாது பாலாஜி, நடிகை ஊா்வசி, அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன் உள்ளிட்டோா் பங்கேற்பு, பாரதிய வித்யா பவன், மயிலாப்பூா், மாலை 6.30.

மே தினம் - உழைப்பாளா்கள் சிலைக்கு மரியாதை செய்தல்: அரசியல் கட்சித் தலைவா்கள் பங்கேற்பு, உழைப்பாளா்கள் சிலை, காமராஜா் சாலை, மெரீனா கடற்கரை, காலை 10.

சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்: அருள்மிகு சொா்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரா் திருக்கோயில், சைதாப்பேட்டை, காலை 5.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க