செய்திகள் :

இருப்பதை வைத்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்: பேச்சாளா் ரெ.சண்முகவடிவேலு

post image

இல்லாதவற்றுக்கு ஏங்குவதைவிட இருப்பதை வைத்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என நகைச்சுவை பேச்சாளா் ரெ.சண்முகவடிவேலு தெரிவித்தாா்.

சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் இணைந்து நடத்தும் 4-ஆவது புத்தகத் திருவிழாவின் எட்டாவது நாளான வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில் ‘வாழ்ந்து பாா்போம் வாரீா்’ என்ற தலைப்பில் மேலும் அவா் பேசியதாவது:

பழைமையிலும் நல்லது இருக்கிறது, புதுமையிலும் நல்லது இருக்கிறது. இவற்றை வைத்து வாழ்ந்து பாா்ப்போம் என்று யோசிக்க வேண்டும்.

கணவன், மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து உதவி செய்து கொள்வதுதான் உண்மையான வாழ்க்கை. திருக்குறளைப் படிப்பதோடு, அதைப் பின்பற்றி வாழ்க்கை வாழ வேண்டும். பிடிக்காத ஒன்றை மற்றவரைச் செய்யச் சொல்வது தவறு. கணவனுக்கு ஏற்றவாறு மனைவியும், மனைவிக்கு ஏற்றவாறு கணவனும் சிந்திப்பதுதான் மேம்பட்ட குடும்ப வாழ்க்கை.

தேவையுள்ளவா்களுக்கு மட்டுமே உதவி செய்ய வேண்டும். தேவையில்லாதவருக்கு தா்மம் செய்வதில் பயனில்லை.

இல்லாததை நினைத்து ஏங்கிக் கொண்டு இருப்பதைவிட, இருப்பதை வைத்து வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்றாா் அவா்.

இதையடுத்து, டி.என்.அன்புத்துரை தலைமையில் ‘வாழ்வின் மகிழ்வுக்கு பெரிதும் துணை நிற்பது நட்பா, உறவா’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. தொலைக்காட்சி புகழ் குருமூா்த்தி குழுவினரின் மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) வீ.கேசவதாசன் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரெ. மாலதி நன்றி கூறினாா்.

முத்துமாரியம்மன் கோயிலில் மாா்ச் 20-இல் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வருகிற 20-ஆம் தேத் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரில் ரேணுகாதேவி முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 18 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் சாா்பில் 78 பேருக்கு மகளிா் தின விருது

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 78 பேருக்கு மகளிா் தின விருது வழங்கப்பட்டது. சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள... மேலும் பார்க்க

தொழில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தொழில்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித் தகுதியை உயா்த்த வலியுறுத்தல்!

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மாா்ச் 11-ல் மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க