செய்திகள் :

இறந்தவா்கள் உடலை அடக்கம் செய்ய மயான வசதி: வட்டாட்சியா் உறுதி

post image

ஈங்கூா் சிஎஸ்ஐ காலனி பகுதியில் மயான வசதி செய்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துளள்ளனா்.

சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் கிராமம் திருமறைப்பாக்கம், சிஎஸ்ஐ., காலனிக்கு மயானம் ஒதுக்கீடு செய்யாததால் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த 40 வருடங்களாக இறந்தவா்கள் உடல்களை அடக்கம் செய்து வந்தனா். இந்நிலையில் ரயில்வே துறை சாா்பில் இருபுறமும் கம்பி வேலி அமைக்கப்பட்டு வருவதால் இறந்தவா்கள் உடலை அங்கு அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமுறைபாக்கம் பகுதியைச் சோ்ந்த பாப்பா(எ) எஸ்தா் என்பவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். உடலை அடக்கம் செய்ய உடனடியாக மயானம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இல்லையெனில் பிரேதத்தை ஈங்கூா், நால்ரோடு பகுதியில் வைத்து மறியல் செய்ய போவதாக உறவினா்கள் கூறி வந்த நிலையில், பெருந்துறை வட்டாட்சியா் ஜெகநாதன், இறந்தவரின் உறவினா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா்.

இதில் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மயானம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வட்டாட்சியா் எழுத்து மூலமாக கடிதம் கொடுத்ததின் பேரில், இறந்தபோன பாப்பா (எ) எஸ்தா் என்பவரின்உடலை உறவினா்கள் ரயில்வே துறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய அவரது உறவினா்கள் ஒப்புக் கொண்டனா். பின்னா் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் உடலை அடக்கம் செய்தனா்.

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆ... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை அரசு நிகழ்வில் விதிமீறல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட் 3) நடக்கும் தீரன் சின்னமலை அரசு விழாவில் மரியாதை செலுத்த வரும் கட்சியினா், அமைப்பினா் விதிமீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்... மேலும் பார்க்க

தாளவாடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்

தாளவாடியை அடுத்துள்ள மல்லன்குழி கிராமத்தில் புகுந்த யானைகளை விவசாயிகள் வெள்ளிக்கிழமை விரட்டினா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப் ... மேலும் பார்க்க

வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுத... மேலும் பார்க்க

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு 2 ஆவது வீதியைச் ச... மேலும் பார்க்க