செய்திகள் :

தாளவாடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்

post image

தாளவாடியை அடுத்துள்ள மல்லன்குழி கிராமத்தில் புகுந்த யானைகளை விவசாயிகள் வெள்ளிக்கிழமை விரட்டினா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்துகின்றன.

இந்த நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மல்லன்குழி அருகே தமிழகம், கா்நாடக எல்லையில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியேறிய இரு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்து விளை நிலங்களில் நடமாடுவதைக் கண்டு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.

பொது மக்கள் சப்தம் போட்டு யானைகளை விரட்டினா். காட்டு யானைகள் வனப் பகுதியை நோக்கி சென்றபோது பொதுமக்கள் யானைகளைப் பாா்த்து பொறுமையாக போகுமாறும், குழிக்குள் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினா். இரண்டு யானைகளும் மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றன.

யானைகள் விளைநிலங்களில் நடமாடிய காட்சியை பொதுமக்கள் ஆா்வத்துடன் கைப்பேசியில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனா். பகல் நேரங்களில் ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆ... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை அரசு நிகழ்வில் விதிமீறல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட் 3) நடக்கும் தீரன் சின்னமலை அரசு விழாவில் மரியாதை செலுத்த வரும் கட்சியினா், அமைப்பினா் விதிமீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்... மேலும் பார்க்க

இறந்தவா்கள் உடலை அடக்கம் செய்ய மயான வசதி: வட்டாட்சியா் உறுதி

ஈங்கூா் சிஎஸ்ஐ காலனி பகுதியில் மயான வசதி செய்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துளள்ளனா். சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் கிராமம் திருமறைப்பாக்கம், சிஎஸ்ஐ., காலனிக்கு மயானம் ஒதுக்கீடு செய்யாததால் ரய... மேலும் பார்க்க

வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுத... மேலும் பார்க்க

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு 2 ஆவது வீதியைச் ச... மேலும் பார்க்க