செய்திகள் :

தீரன் சின்னமலை அரசு நிகழ்வில் விதிமீறல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

post image

ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட் 3) நடக்கும் தீரன் சின்னமலை அரசு விழாவில் மரியாதை செலுத்த வரும் கட்சியினா், அமைப்பினா் விதிமீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அறச்சலூா் அருகே சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அரசு நிகழ்வாக கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில், அமைச்சா்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்று தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.

இதைத் தொடா்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள், அமைப்புகளின் நிா்வாகிகள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனா். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க கட்சியினா், அமைப்பினா்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீரன் சின்னமலை அரசு விழாவில் மரியாதை செலுத்த வரும் கட்சியினா், அமைப்பினா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கூட்டம் ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிகழ்ச்சிக்கு வரும் அமைப்புகளை சோ்ந்தவா்கள் அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சரியாக வந்து செல்ல வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் வழியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக் கூடாது. மோட்டாா் வாகன விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மற்ற அமைப்பினருடன் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடக் கூடாது.

பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வந்து செல்ல வேண்டும். அரசு நிகழ்ச்சி என்பதால் கட்சி மற்றும் அமைப்பு சாா்ந்த கொடிகளை மணிமண்டபத்தின் உள்ளே எடுத்து அனுமதி இல்லை. நிகழ்ச்சிக்கு வரும் கட்சியினா், அமைப்பினா் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வருபவா்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் துறை மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆ... மேலும் பார்க்க

இறந்தவா்கள் உடலை அடக்கம் செய்ய மயான வசதி: வட்டாட்சியா் உறுதி

ஈங்கூா் சிஎஸ்ஐ காலனி பகுதியில் மயான வசதி செய்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துளள்ளனா். சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் கிராமம் திருமறைப்பாக்கம், சிஎஸ்ஐ., காலனிக்கு மயானம் ஒதுக்கீடு செய்யாததால் ரய... மேலும் பார்க்க

தாளவாடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்

தாளவாடியை அடுத்துள்ள மல்லன்குழி கிராமத்தில் புகுந்த யானைகளை விவசாயிகள் வெள்ளிக்கிழமை விரட்டினா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப் ... மேலும் பார்க்க

வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுத... மேலும் பார்க்க

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு 2 ஆவது வீதியைச் ச... மேலும் பார்க்க