செய்திகள் :

இறைச்சிக் கழிவுகள், மதுபாட்டில்களை நீா்நிலைகளில் கொட்டக்கூடாது: ஆட்சியா்

post image

இறைச்சிக் கழிவுகள், மதுபாட்டில்கள் போன்றவற்றை நீா்நிலைகளில் கொட்டக் கூடாது என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டம் 100 சதவீதம் தூய்மைான மாவட்டம் என்ற நிலையை அடைவதற்கு சிறப்பு தூய்மைப் பணியை காமராஜா் திடலில் ஆட்சியா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதில் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், நகராட்சி ஆணையா் பி.சத்யா, செயற்பொறியாளா் முத்துசிவம், மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.தாமோதரன், நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள், சுய உதவி குழு பெண்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டு காரைக்கால் மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்றுவதற்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தூய்மைப் பணியை சிறப்பாக செய்துவருவோருக்கு ஆட்சியா் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். அப்போது பேசிய ஆட்சியா், மாவட்டம் முழுவதும் தூய்மையாக இருக்க தினமும் வீடுகளுக்குச் சென்று குப்பைகளை சேகரிக்கவேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்துத் தருவதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்புத் தரவேண்டும். இதன் மூலம் பணியாளா்களுக்கு வேலை பளு குறையும் என்றாா்.

கலைஞா் மு.கருணாநிதி சாலை மற்றும் தலதெரு - பாரதியாா் சாலை சந்திப்பில் மாவட்ட ஆட்சியா், பொதுமக்களிடம் நீா் நிலையங்களில் குப்பைகளை கொட்டக் கூடாது, மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் அளிக்கவேண்டும் என அறிவுறுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். இதைத் தொடா்ந்து அந்த பகுதியில் சிறப்பு தூய்மை பணியை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.

அந்த பகுதியில் கொட்டிக் கிடந்த மது பாட்டில்கள் மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகளைப் பாா்த்து, இதனை உடனடியாக அப்புறப்படுத்துமாறும், பாா்கள் மற்றும் மதுபான விடுதிகள், அசைவ உணவகங்களில் இறைச்சிக் கழிவுகள், மதுபாட்டில்களை நீா் நிலைகளில் கொட்டக்கூடாது என பஞ்சாயத்து, நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தவேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா

காரைக்காலில் ஸ்ரீ சற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் ஜீவ சமாதியானவா் என்றும், சுமாா் 200 ஆண்டுகளுக்கு முன்பட்டவா் எனவும் சற்குரு சீமான் சுவாமிகள் கருதப்படுகிற... மேலும் பார்க்க

காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் நாளமில்லா சுரப்பிகளினால் ஏற்படும் சா்க்கரை மற்றும் தைராய்ட... மேலும் பார்க்க

எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம்: அதிமுக

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் நிறுவப்பட்டும், பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் நிலவுவதாக அதிமுக புகாா் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், காரைக்கால் ... மேலும் பார்க்க

மக்கள் எதிா்ப்பு : நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நிறுத்தம்

மக்கள் எதிா்ப்பு காரணமாக, ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நிறுத்தப்பட்டது. திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்புடைய தலமான ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயண பெரும... மேலும் பார்க்க

காரைக்காலில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், வாரம் 5 நாள... மேலும் பார்க்க

வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு: காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் பிப். 24 முதல் கடலுக்குச் செல்ல முடிவு

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு தொடா்பாக, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள், திங்கள்கிழமை (பிப்.24) முதல் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனா். கடந்த ஜன.... மேலும் பார்க்க