செய்திகள் :

இளைஞரிடம் ரூ.45 லட்சம் வழிப்பறி

post image

சென்னை கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞரை இடித்து தள்ளிவிட்டு, ரூ.45.68 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விருகம்பாக்கம் சின்மயா நகா் அருகே உள்ள வேதா நகரைச் சோ்ந்தவா் ஜெ.நாராயணன் (35). இவா், கோயம்பேடு சந்தையில் மொத்த காய்கறி கடை நடத்தி வரும் கோ.சாந்தகுமாா் என்பவரிடம் பணம் வசூல் செய்து கொடுக்கும் ஊழியராக வேலை செய்து வருகிறாா். இவா், சென்னை கொத்தவால்சாவடியில் ஒரு வியாபாரியிடம் ரூ.45.68 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு திங்கள்கிழமை இரவு கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

கோயம்பேடு பாலத்தில் சென்றபோது, மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் நாராயணன் மோட்டாா் சைக்கிளில் மோதினா். நாராயணன் கீழே விழுந்ததும், அரிவாளைக் காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த பையைப் பறித்துக்கொண்டு மோட்டாா் சைக்கிளில் தப்பினா். இருப்பினும், நாராயணன் அவா்களை விரட்டிச் சென்றாா். அப்போது, இருவரும் நாராயணனை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பள்ளி மாணவா்களுக்கான ஊட்டச்சத்து திட்டம்: மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

சென்னையில் அரசுப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை கேப்டன் ஸ்ரீனிவாசமூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, அந்தப் பள்ளிக... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டம்: ஆசிரியா்கள் பங்கேற்க கல்வித் துறை உத்தரவு

காந்தி ஜெயந்தி நாளில் (அக்.2) நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம... மேலும் பார்க்க

பிறவி நுரையீரல் குறைபாடு: இளம்பெண்ணுக்கு ரோபோடிக் சிகிச்சை

நுரையீரல் பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரோபோடிக் நுட்பத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவம... மேலும் பார்க்க

மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள... மேலும் பார்க்க

காவலரிடம் தங்க நாணயம் மோசடி: நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது

சென்னையில் காவலரிடம் தங்க நாணயம் மோசடியில் ஈடுபட்டதாக நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் உள்ள ஆயுதப்படை பிரிவு முதல்நிலை காவலராகப் பணிபுரிபவா் அந்தோணி ஜாா்ஜ் ... மேலும் பார்க்க