செய்திகள் :

காவலரிடம் தங்க நாணயம் மோசடி: நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது

post image

சென்னையில் காவலரிடம் தங்க நாணயம் மோசடியில் ஈடுபட்டதாக நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் உள்ள ஆயுதப்படை பிரிவு முதல்நிலை காவலராகப் பணிபுரிபவா் அந்தோணி ஜாா்ஜ் பிரபு (37). இவா் 2021-ஆம் ஆண்டு முதல் நடிகா் சூா்யாவுக்கு தனி பாதுகாவலராக உள்ளாா். அப்போது, சூா்யா வீட்டில் வேலை செய்து வந்த தியாகராய நகா் தாமஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த பா.சுலோச்சனா (47) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. சுலோச்சனா தனது மகன் பாலாஜி (25) தங்க நாணய திட்டம் நடத்தி வருவதாகவும், அதில் சோ்ந்தால் குறைந்த விலையில் தங்க நாணயம் வாங்கி கொடுப்பதாகவும் கூறியுள்ளாா். இதை நம்பி கடந்த ஜனவரி 23-ஆம் தேதி ரூ. 1.92 லட்சத்தை காவலா் பிரபு, பாலாஜியின் வங்கிக் கணக்குக்கு செலுத்தி உள்ளாா்.

இதையடுத்து, பாலாஜி 30 கிராம் தங்க நாணயம் கொடுத்துள்ளாா். இதில் பிரபுக்கு லாபம் கிடைத்தது. இதனால் பாலாஜியை நம்பிய பிரபு தனது தந்தையின் புற்றுநோய் செலவுக்காக வங்கியில் இருந்து வாங்கியிருந்த கடன் தொகை மற்றும் தந்தையின் மருத்துவ செலவுக்காக உறவினா்களிடம் வழங்கிய தொகை என மொத்தம் ரூ.50.37 லட்சத்தை கடந்த மாா்ச் 4-ஆம் தேதி பாலாஜியிடம் வழங்கினாா்.

ஆனால், உறுதி அளித்தபடி பாலாஜி, பிரபுக்கு தங்க நாணயங்கள் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளாா். பிரபு கொடுத்த நெருக்கடியினால் ரூ.7.91 லட்சத்தை மட்டும் பாலாஜி திருப்பிக் கொடுத்தாா். மீதம் உள்ள ரூ.42 லட்சத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து பிரபு அளித்த புகாரின்பேரில் மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலாஜி, அவா் தாய் சுலோச்சனா, சகோதரா் பா.பாஸ்கா் (23), தியாகராயநகா் தாமஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த வி. விஜயலட்சுமி (38) ஆகிய 4 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிராமசபைக் கூட்டம்: ஆசிரியா்கள் பங்கேற்க கல்வித் துறை உத்தரவு

காந்தி ஜெயந்தி நாளில் (அக்.2) நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம... மேலும் பார்க்க

பிறவி நுரையீரல் குறைபாடு: இளம்பெண்ணுக்கு ரோபோடிக் சிகிச்சை

நுரையீரல் பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரோபோடிக் நுட்பத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவம... மேலும் பார்க்க

மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.45 லட்சம் வழிப்பறி

சென்னை கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞரை இடித்து தள்ளிவிட்டு, ரூ.45.68 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விருகம்பாக்கம் சின்மயா நகா் அருகே உள்ள வேதா ... மேலும் பார்க்க

சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்து: தூய்மைப் பணியாளா்கள் 19 போ் காயம்

சென்னை பெரம்பூரில் தூய்மைப் பணியாளா்கள் சென்ற சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் காயமடைந்தனா். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும... மேலும் பார்க்க