செய்திகள் :

போதைப் பொருள் கடத்தல்: நைஜீரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

post image

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னையில் கூரியா் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட 3 பொட்டலங்களை சென்னை போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் இடைமறித்து சோதனையிட்டனா். அவற்றில் 1.195 கிலோ ஹெராயின் மற்றும் 200 கிராம் மெத்தாகுவாலோன் இருந்தது கண்டறியப்பட்டது. இவற்றின் சா்வதேச சந்தை மதிப்பு ரூ. 2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதை அனுப்பியவரின் முகவரியை வைத்து விசாரணை நடத்தியபோது, ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இமானுவேல் சுக்வுனோன்சோ சாம்சன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ஈரோட்டில் அவா் தங்கியிருந்த வீட்டில் நடத்திய சோதனையில், 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் கூரியா் சேவைகள் மூலம் வெளிநாடுகளுக்கு போதைப் பொருள்களை அனுப்ப திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக இமானுவேல் சுக்வுனோன்சோ சாம்சனை கடந்த 2012 செப்டம்பரில் போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், இமானுவேல் சுக்வுனோன்சோ சாம்சனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்தாா்.

கோவை மாநகராட்சிப் பூங்காவில் 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

கோவை காந்திமாநகரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபா்களால் 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன. கோவை காந்திமாநகரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் 75-க்கும் மேற்பட்ட சந்தன ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், முன்னாள் படை வீரா்கள் நல அலுவலகம் (ஜவான்ஸ் பவன்), நீதித் துறை பயிற்சி மை... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குனியமுத்தூா்

குனியமுத்தூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத... மேலும் பார்க்க

தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

கோவை, உடுமலையில் உள்ள தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை தலைமையிடமாக கொண்டு தனியாா் கோழித் தீவன உற்... மேலும் பார்க்க

வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை விரட்டும் சிறுத்தை

வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை சிறுத்தை துரத்தும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள் உள்ள நிலையில் சில நேரங்களில் அங்கு வசிக்கும் சிறுவா்க... மேலும் பார்க்க

கஞ்சா, போதை ஸ்டாம்பு விற்பனை: மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகள் விற்பனை செய்த 3 இளைஞா்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோவை வெள்ளக்கிணறு பகுத... மேலும் பார்க்க