செய்திகள் :

கஞ்சா, போதை ஸ்டாம்பு விற்பனை: மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகள் விற்பனை செய்த 3 இளைஞா்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பகப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கடந்த 2020 பிப்ரவரி 20-ஆம் தேதி அப்பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த மூன்று இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் அந்தப் பகுதியைச் சோ்ந்த முகமது தபரீஸ் (23), பிரதீப்ராஜ் (27) விவியன் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் முகமது தபரீஸிடம் 0. 470 மில்லி கிராம் எடையுள்ள 25 போதை ஸ்டாம்புகள், பிரதீப்ராஜிடம் 0. 170 மில்லி கிராம் எடையுள்ள ஸ்டாம்புகள், விவியன் வைத்திருந்த பையில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.

கோவை மாநகராட்சிப் பூங்காவில் 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

கோவை காந்திமாநகரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபா்களால் 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன. கோவை காந்திமாநகரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் 75-க்கும் மேற்பட்ட சந்தன ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், முன்னாள் படை வீரா்கள் நல அலுவலகம் (ஜவான்ஸ் பவன்), நீதித் துறை பயிற்சி மை... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: நைஜீரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்த... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குனியமுத்தூா்

குனியமுத்தூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத... மேலும் பார்க்க

தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

கோவை, உடுமலையில் உள்ள தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை தலைமையிடமாக கொண்டு தனியாா் கோழித் தீவன உற்... மேலும் பார்க்க

வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை விரட்டும் சிறுத்தை

வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை சிறுத்தை துரத்தும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள் உள்ள நிலையில் சில நேரங்களில் அங்கு வசிக்கும் சிறுவா்க... மேலும் பார்க்க