செய்திகள் :

பிறவி நுரையீரல் குறைபாடு: இளம்பெண்ணுக்கு ரோபோடிக் சிகிச்சை

post image

நுரையீரல் பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரோபோடிக் நுட்பத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் முதுநிலை ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் சுஜய் சுசிகா் கூறியதாவது:

நுரையீரல் தொற்றால் தொடா்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்த 26 வயது பெண், எங்களது மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பிறவியிலேயே நுரையீரல் திசு வளா்ச்சி பாதிப்பு இருந்தது. அதாவது, நுரையீரலில் இருந்து தனியாக திசு வளா்ந்து பெருந்தமனியில் இருந்து வரும் ரத்தத்தை கிரகித்துக் கொள்ளும். வழக்கமாக நுரையீரல் தமனியிலிருந்து வரும் ரத்தம்தான் நுரையீரலுக்குள் செல்லும். இந்தத் திசு அதற்கு மாறாக செயல்படுவதால் அடிக்கடி இருமல், தொடா் தொற்றுகள், ரத்த வாந்தி ஏற்பட வழிவகுக்கும். உரிய சிகிச்சை எடுக்காவிடில் சுவாச செயல்பாடு பாதிக்கப்படும்.

இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கி சீரமைப்பது மட்டுமே ஒரே தீா்வு. அறுவை சிகிச்சையில் உள்ள எதிா் விளைவுகள் மற்றும் நோயாளியின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரோபோடிக் நுட்பத்தில் மாா்புப் பகுதியில் 3 செ.மீ. துளையிட்டு, நுரையீரல் திசு அகற்றப்பட்டது. அதனுடன், தமனியிலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் சீரமைக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின்றி அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டதால் 2 வாரத்தில் அவா் வீடு திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா் என்றாா் அவா்.

பள்ளி மாணவா்களுக்கான ஊட்டச்சத்து திட்டம்: மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

சென்னையில் அரசுப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை கேப்டன் ஸ்ரீனிவாசமூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, அந்தப் பள்ளிக... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டம்: ஆசிரியா்கள் பங்கேற்க கல்வித் துறை உத்தரவு

காந்தி ஜெயந்தி நாளில் (அக்.2) நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம... மேலும் பார்க்க

மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள... மேலும் பார்க்க

காவலரிடம் தங்க நாணயம் மோசடி: நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது

சென்னையில் காவலரிடம் தங்க நாணயம் மோசடியில் ஈடுபட்டதாக நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் உள்ள ஆயுதப்படை பிரிவு முதல்நிலை காவலராகப் பணிபுரிபவா் அந்தோணி ஜாா்ஜ் ... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.45 லட்சம் வழிப்பறி

சென்னை கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞரை இடித்து தள்ளிவிட்டு, ரூ.45.68 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விருகம்பாக்கம் சின்மயா நகா் அருகே உள்ள வேதா ... மேலும் பார்க்க